Monday, June 22, 2020

உங்கள்_உடலுக்கு #நீங்கள்தான்_சிறந்த #நிஜ_மருத்துவர்.❓❗

😨ஆங்கில மருத்துவம் நமது உடலுக்கு எப்போதும் ஏற்றதா
பிரஷர் ,சுகர் என்று மூன்று மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள்.
10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே!! இது குறித்து நாம் ஏன் என்று சிந்திப்பதே இல்லை !!!
காரணம் பழக்கம் ஆகி விடுகிறது.
கடுகளவு கூட நமது நோய்கள் எதையும் இந்த மாத்திரைகள் குறைத்ததா?.
அல்லது கட்டுப்படுத்தியதா?.
அல்லது வரும் முன் தடுத்ததா?.
எதுவுமே நடக்கவில்லையே?.
நமது உடல் நாசமாய் போனதும், பல லட்சங்கள் வீணாகி கடனாகிப் போனதும்,மருத்துவமனையில் அலட்சியமாக கால் கடுக்க திகிலோடு ஒவ்வொரு நேரமும் இருந்ததுதானே மிச்சம் ?.
இதை ஏதோ அனுமானமாக கூறவில்லை.
பல வருட தொடர் வாழ்வியல் பயிற்சி மூலமாகவே கூறுகின்றோம் !!!
ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த லாயக்கற்ற ரசாயன மருத்துவமாகும் .
அது உங்களது நோயை உங்களது உடம்புகுள்ளேயே தற்க்காலிகமாக ஒளித்து வைக்கும். அது மட்டும்தான் அந்த மருத்துவத்துக்கு தெரியும்.
அவ்வாறு ஒளித்து வைத்து வைத்து ஒரு நாள் கடும் நோயாக நம்மை திருப்பி தாக்கும் அதுதான்……
தொடர் வயிற்றுப் பிரச்சனை,
தலை வலி
என தொடங்கி பின்பு
கேன்சர்,
கல்லீரல் பாதிப்பு ,
கிட்னி பாதிப்பு ,
இதய பாதிப்பு,
நரம்பு மண்டல பாதிப்பு ,
ஆண்மை குறைவு,
கர்பபை கோளாறு
என்று பல்வேறு பாதிப்புகளை தீவிரமாக ஏற்படுத்தும் !!!
பெயரே வைக்க முடியாத அளவுக்கு நாளொரு வியாதிகள் வருவதற்க்கும் மர்ம காய்ச்சல்கள் வருவதற்க்கும் நோய்களை நம் உடலுக்குள்ளேயே ஆங்கில மருத்துவம் மறைத்து வைத்ததே இதன் காரணமாகும்.
கல்லீரலை பாதித்து வரும் மஞ்சள் காமாலைக்கு ஏன் நீங்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பது இல்லை,
காரணம் என்ன?.
ஆங்கில மருந்துக்கள் அனைத்துமே கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பது 100 சதவிகித உண்மையாகும்!.
எனவே உங்கள் உடலுக்கு நீங்கள்தான் சிறந்த நிஜ மருத்துவர்.
உங்களது உடல் உங்களிடம் பேசும் மொழிகளை அறிந்து செயல் படுங்கள் அவசரமான தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தேவை என்றால் ஆங்கில மருத்துவத்தை அணுகலாமே தவிர அதையே வாழ்க்கை முழுமைக்கும் கொண்டு சென்றால் வாழ்க்கையே இடி விழுந்த சூனியமாகி விடும்.
அலோபதி மருத்துவம் படிப்பில் தேர்ச்சி பெற பல லட்சங்கள்,கோடிகள் செலவு செய்பவர் நம் உடம்பில் உள்ள நோய் போகணும்னு நினைப்பாரா?...
காசு பார்க்கணும்னு நினைப்பாரா?.
டயபடிக் டாக்டர் தனது நோயாளி நீரிழிவு நோய் வந்து சாக கூடாது என்று வைத்தியம் செய்து பணம் பார்ப்பார்.
ஹார்ட் டாக்டர் தனது நோயாளி இருதய அட்டாக் வரக்கூடாது என்று வைத்தியம் செய்து பணம் பார்ப்பார்.
கிட்னி டாக்டர் தனது நோயாளி இருதய அட்டாக் வரக்கூடாது என்று வைத்தியம் செய்து பணம் பார்ப்பார்.
இவர்கள் எல்லோரும் நம்மை தினம் சாப்பிட வேண்டிய அத்தியாவசிய பழங்கள்,காய்கறி
களை கூட சாப்பிட விட மாட்டார்கள்.
அவர்களுக்கு அவர்கள் துறைகளில் உள்ள நோய் உடலில் இருக்கக் கூடாது.அந்த நோயால் மட்டும் யாரும் செத்து விடக் கூடாது என்று நினைப்பார்கள்.
எந்த நோயும் நமக்கு இருக்க கூடாது என்று சிந்திக்கும் ஒரே டாக்டர் நாம்தான்.
நமக்கே நம் உடம்பை அறிந்து கொள்ள இயலவில்லை என்றால் இன்னொருவரின்
பண வியாபாரத்தில் நாம் எப்படி தப்பிக்க இயலும்?!...
உணவே நம் மருந்து.
வேறு ஏதும் அல்ல.
நாம் சந்தோஷமாக இருந்தால் நம் உடலில் நல்ல ஜெல் சுரக்கும்.
இல்லையேல் அமிலம் போன்ற ஜெல் சுரந்து உடல் கேடாகும்.
நமக்கு என்றும் நாம்தான் சிறந்த மருத்துவர் என்பதை போக போக உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...