Sunday, June 21, 2020

திமுக எம்.எல்.ஏ., வசந்தம் காரத்திகேயனுக்கு கொரோனா உறுதி.

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
rishivandiyam, dmk, mla, vasantham karthikeyan, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, DMK MLA, coimbatore, tamil nadu, tn news, tn district, COVID-19 positive, covid-19 positive cases, திமுக,எம்எல்ஏ,கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவருக்கும், அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

latest tamil news




மீண்டு வரவேண்டும்:



இதுகுறித்து ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த, திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார். முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...