Thursday, June 25, 2020

பிரச்சனைகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும் கண்ணாடிகள்..!!

அவைகளுக்கு முகம் காட்டுங்கள்..புறமுதுகிடாதீர்கள்...!!
எந்த ஒரு விசயத்த முடிக்கனும்னாலும்...
ஆர்வம் தொடர்ந்து இருக்கனும்...
ஆரம்பத்துல மட்டும் இருக்ககூடாது..!!
அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள்...
வருவதற்கு வழி இருக்கும், வசதி இருக்கும், ஆனால் வாழ்க்கை இருக்காது..!!
உங்களை குறை கூறும் பலருக்கு உத்தமனாய் இருப்பதை விட...
உங்களை நம்பும் சிலருக்கு உண்மையாய் இருங்கள்..!!
நீங்கள் மேலே உயரும் போது நீங்கள் யார் என்று உங்கள் நண்பர்கள் அறிவார்கள்...!!
ஆனால்,
நீங்கள் கீழே போகும் போது தான் உங்கள் உண்மையான நண்பர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்... !!
வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்களும் உண்டு...
மறந்து விடாதா என சில
நாட்களும் உண்டு...
நம்மை கீழே தள்ளியவர்களும், தள்ள நினனைப்பவர்களுக்கும், ஒரே எண்ணம் தான்...
நாம் கவலைப்படுவதையும், கண்ணீர் சிந்துவதையும் பார்க்க வேண்டும் என்பதே...
நம் கவலைகளும் கண்ணீரும் எந்த வகையிலும் நமக்கு பயன் தரப்போவதில்லை...
ஆனால், நம் வீழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்கிறவர்களுக்கு பயன்தரும்...
துயரங்கள் எதுவாயினும், முகத்தில் புன்னகையும் மனதில் நம்பிக்கையும் கொள்வோம்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...