Friday, December 18, 2020

கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மதம்தான் முதலில்...மீதி எல்லாமே அதற்குப்பிறகுதான்...

 ஹிந்துக்களைக் காக்க பாஜக எதுவும் செய்யவில்லை...இன்னும் தீவிரமாக ஹிந்துக்களைக் காக்கப் போராடும் கட்சியை நாம் உருவாக்க வேண்டும் என்கிறார் நம் நண்பர்..( அவர் அதிதீவிர ஹிந்துத்வர் , தேசபக்தர்.)  அவருடைய வருத்தம் புரிகிறது...ஆனால் யதார்த்தம் என்ன ? 


அவர் பதிவில் என் கமெண்ட்..


//  கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மதம்தான் முதலில்...மீதி எல்லாமே அதற்குப்பிறகுதான்...


ஆனால் ஹிந்துக்களுக்கு மதம் என்பது அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல...சோறு முக்கியம் ஹிந்துக்களுக்கு...இந்த இடத்தில் சோறு என்பது சௌகரியமான வாழ்க்கை என்று பொருள் கொள்ளலாம்..அதற்கு எந்த இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது..


ராமர் கோயில் வேண்டாம் என்று சொல்லும் கோடிக்கணக்கான ஹிந்துக்களை என்னால் காட்ட முடியும்...ஆனால் பாப்ரி கும்மட்டத்தை இடித்தது நியாயம் தான் என்று சொல்லும் ஒரே ஒரு இஸ்லாமியரைக் காட்டுங்கள் பார்ப்போம்?


பிரச்சினை நம் டி.என்.ஏ வில் இருக்கிறது...நமக்கு சாதி உள்ளிட்ட உட்பிரிவுகள் தான் முக்கியம்...நம் ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்துக்கும் அதுவே காரணம்..பிரித்விராஜில் ஆரம்பித்து சிவாஜி வரை மொகலாயர்களை எதிர்த்துப்போராடிய எந்த ஹிந்து மன்னனுக்கும் சக ஹிந்து மன்னர்கள் ஆதரவாக இருந்ததில்லை...மாறாக மொகலாயர்களோடு சேர்ந்து சக ஹிந்து மன்னர்களை அழித்தது தான் வரலாறு..


மொகலாயன் எல்லா ஹிந்துக்களையும் எதிரியாக , காபிராகத்தான் பார்த்தான்...எல்லா கோயில்களையும் இடித்தான்..எல்லா ஹிந்து மன்னர்களும் ஒன்றாகச்சேர்ந்திருந்தால் எப்போதோ மொகலாயர்களை விரட்டியிருக்கலாம்...கடைசிவரை நடக்கவில்லையே?


இதுதான் நம் டிசைன்...இதில் பாஜகவை மட்டும் குறைகூறி புண்ணியம் இல்லை...


நீங்கள் சொல்லும் பாஜகவை விட அதிதீவிர ஹிந்துத்வம் பேசும் கட்சிகள் இப்போதும் நாட்டில் இருக்கின்றன..அவற்றையெல்லாம் ஹிந்துக்களே ஆதரிப்பதில்லை...


இப்பவும் முத்தலாக் தடை , என்.ஜி.ஓ ரத்து , 370 நீக்கம் , சி.ஏ.ஏ - என் ஆர்.சி , ராமர் கோயில் போன்றவற்றின் அருமை புரியாமல் இதெல்லாம் மதவாத அரசியல் என்று பிதற்றிக்கொண்டு திரியும் ஹிந்துக்கள் தான் அதிகம்..


இன்னொரு பக்கம் பாஜக ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்த கொஞ்சம் முயற்சி செய்தாலும் , ஆகா பாஜக மரபுகளை மீறுகிறது என்று கொந்தளிக்கும் ஆசாரவாதிகள் மறுபுறம்...


தெலுங்கானா ஒவைசி பீஹாருக்குச்சென்று மதத்தைக்காட்டி வெற்றி பெற முடிகிறது.. ஆனால் பாஜக வடநாட்டுக்கட்சி என்று உளறிக்கொண்டு திரியும் தமிழர்களே அதிகம்..


ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதிய சிடுக்குகளைப் புரிந்துகொண்டு அரசியல் செய்வது ( இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் இரண்டாம் , மூன்றாமிடத்தில் இருக்கும் சாதிகளுக்கு ஸ்பேஸ் கொடுப்பது ) மற்றும் அனைவருக்கும் வீடு , கழிப்பறை , கேஸ் , உட்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை வைத்துதான் மோடி திரும்பத்திரும்ப ஜெயிக்கிறாரே தவிர ஹிந்துத்வம் மட்டும் அல்ல....அப்படி அவர் ஹிந்து மதத்தை மட்டும் முன் நிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தால் முதல் எதிர்ப்பு ஹிந்துக்களிடமிருந்து தான் வரும்...ஒரே தேர்தலோடு துடைத்தெறியப் படுவார்...


இங்கு இவ்வளவுதான் முடியும்..மெள்ளமெள்ளத்தான் மாறும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...