Tuesday, December 22, 2020

நிம்மதியா............

 கணவர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை

என போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.
அவரிடம் மனைவியின் அடையாளங்கள் குறித்து
போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது நடந்த உரையாடல்...
கணவர் : ஷாப்பிங் போறேன்னு நேத்து வெளில போன
என் மனைவி இன்னும் வீட்டுக்கு வரலை சார் ..
போலீஸ்: அப்டியா.... உங்க மனைவி பேரு என்ன..
மங்கான்னு கையெழுத்து போடுவாங்க....
மங்கா..வா..மங்காத்தாவான்னு சரியா...தெரியல சார்..
என்ன உயரம் இருப்பாங்க ?
கணவர்: அவ்வளவு சரியா தெரியலைங்களே சார்...
போலீஸ்; சரி, அவங்க கண்ணு என்ன கலர்ல... இருக்கும் ?
கணவர்: அடிக்கடி லென்ஸ் மாத்திருவாங்க சார் ..
போலீஸ்: அவங்க முடி என்ன கலர்ல இருக்கும் ?
கணவன்: அதையும் அடிக்கடி கலர் மாத்திடுவா சார்....
போலீஸ்: காணாமல் போனப்ப
அவங்க என்ன கலர் டிரஸ் போட்ருந்தாங்க...
கணவர்: சரியா...ஞாபகமில்லையே சார்......
போலீஸ்: சரி, எந்த வாகனத்துல போனாங்க..?
கணவர்: சார் ..அது பிளாக் கலர் ஆடி கார் சார். ...
போலீஸ்: சரி கார் எப்படி இருக்கும்?
கணவர்: அது கருப்பு நிற ஆடி ஏ8 சார்.
3.0 லிட்டர், வி6 என்ஜின் பொருத்தப்பட்டது,
333 ஹார்ஸ் பவர் கொண்டது.
எட்டு ஸ்பீட், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன்,
மானுவல் மோடும் உண்டு. எல்இடி ஹெட்லைட் கொண்டது.
நல்ல கண்டிஷன்ல இருக்கும் சார்..
இதுவரைக்கும் ஒரு சிங்கிள் ஆக்சிடென்ட் கிடையாது சார்...
டயர்லாம் தேயாம புத்தம் புதுசா இருக்கும்...
சும்மா...தண்ணி மாதிரி ஓடும் சார்...
ஹை வேல போனா...சும்மா ராக்கெட் மாதிரி பறக்கும் சார்..
காரின் முன்புற டோருக்கு பக்கத்தில் லேசான ஸ்கிராட்ச் இருக்கும்... வேற ஒரு பிரச்னையுமே இல்லாத...
அருமையான
வண்டி... சார் ..
(இதற்கு மேல் காரைப் பற்றிக் கூற முடியாமல் கதறி அழத் தொடங்கினார் கணவர் )
போலீஸ்: கவலைப் படாதீங்க சார்....புரியுது...புரியுது...
எப்படியாவது ... உங்க காரைக் கண்டிப்பா
கண்டுபிடிச்சு கொடுத்துடறோம் ! போதுமா...நிம்மதியா..
வீட்டுக்கு போங்க... 😳😱🤔😧😲😂🤣😅

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...