Thursday, June 24, 2021

எலக்ட்ரிக் காருக்கு திட்டமிடுங்கள்...

 புதிதாக பெட்ரோல், டீசல் கார் வாங்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்... அதிக பட்சம் 5 ஆண்டுகள் தான் அந்தக் காரின் மதிப்பு. பொய்யில்லை தொடர்ந்து படியுங்கள்.

அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டில் கனடாவில் கனடா குரூட் ஆயில் பேரல் 44 டாலரில் இருந்து 14 டாலராகவும், அமெரிக்காவின் குரூட்ஆயில் பேரல் 77 டாலரில் இருந்து 51 டாலராகவும் குறைந்துகொண்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார சரிவு என்று ஊடகங்கள் எழுதுகிறது. ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமல்ல. இதற்கு காரணம் உலகை புரட்டிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாகும்.
அது என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிறிய பென்டார்ச் பேட்டரி தான். புதிதாக மாற்றம் செய்யப்பட இந்த பேட்டரிக்கு லித்தியம் ஜயான் பேட்டரி என்று பெயர். இதில் நாம் இதுவரை அடைத்ததைப் போல் பல மடங்கு மின்சக்தியை அடைக்க முடியும் அது மட்டுமல்லாமல் அரைமணி நேரத்தில் உபயோகித்த சக்தியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியின் லைப் என்கிற ஆயுட்காலம் 25 வருடம்.
உலகம் முழுவதும் இந்த பேட்டரியை உபயோகித்து கார்களையும் ஸ்கூட்டர்களையும் லாரிகளையும் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் இலான்மஸ்க் என்கிற ஒரு மேதை டெஸ்லா என்கிற கார் கம்பெனியை ஆரம்பித்து உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
Tesla model 3, model s என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் ஒரே நேர சார்ஜில் 600 கிலோமீட்டர் செல்கிறது. இதன் மணிக்கு வேகம் 800 கிலோமீட்டரும் ஆக்சிலரேசன் 0-60 கிலோமீட்டர் 4 செக்கண்டிலும் செல்கிறது. இதன் விலை அமெரிக்காவில் டீசல் கார் விலையை விட குறைவு அதாவது 35000 டாலர்.
இந்தக் கார் இந்த வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியல் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கார்களை வீட்டிலேயே சாரஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல் போட வேண்டாம் 25 வருடங்கள் பேட்டரி மாற்ற வேண்டாம். இந்த வருடத்தில் இதுவரை உலகமுழுவதும் 20 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது.
அடுத்த ஆண்டு 50 லட்சம் எலக்ட்ரிக் கார்களும் அதற்கு அடுத்த ஆண்டு 1கோடி கார்கள் விற்பனையாகும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் இனிமேல் பெட்ரோல் டீசல் கார்களை வாங்க மாட்டார்கள். இதுதான் குரூட் ஆயில் விலை சரிவிற்க்கு காரணம். இன்னும் 10 வருடத்திற்குள் கேஸ், பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் விலை மதிப்பற்று கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்படும்.
கடைசியாக ஒரு தகவல் பெட்ரோல் எஞ்சினில் மொத்த மூவிங் பாகங்கள் 2000 ஆனால் எலக்ட்ரிக் காரில் 18 பாகங்கள் மட்டுமே இருப்பதால் எளிதில் பழுதடையாது அப்படி பழுதடைந்தால் நாமே சரி செய்து கொள்ளலாம்.
நம் ஊருக்கு எலக்ரிக் கார்களும் ஸ்கூட்டர் பைக்களும் இந்த ஆண்டு அதாவது 2021'ல் விற்பனைக்கு வருகிறது.
வெப்சைட் : கூகுளில் tesla model 3 என்று அடியுங்கள்...
முடிந்த வரை எலக்ட்ரிக் காருக்கு திட்டமிடுங்கள்...
May be an image of motorcycle and text that says "பைக் நிறுவனங்களுக்குக் காலக்கெடு! 2025ஆம் ஆண்டுக்குள் இருசக்கர வாகன நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் முழுவதையும் எலெக்ட்ரிக் மயமாக்க வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்துள்ளது."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...