Sunday, September 25, 2022

சொன்னாலும் புரியாது.

 #ஒருவர் தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்

#அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது…
இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார்
#இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு
#அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக,
நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது.
அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்
#கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல
#இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்👁️
May be an image of car and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...