Thursday, September 29, 2022

அவமானம்!

 சமீபத்தில், தமிழகத்திற்கு விஜயம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மதுரையில் பேசும் போது, 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான ஆக்கப்பணிகள், 95 சதவீதம் முடிந்து விட்டன' என்றார். இதை அறிந்த, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.,க்களான, சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள, மதுரை தோப்பூர் பகுதிக்கு சென்று, ௯௫ சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறும், எய்ம்ஸ் எங்கே என்று கேள்வி எழுப்பி, பதாகைகளுடன் நின்றதாக செய்திகள் வெளியாகின. இந்த அதிபுத்திசாலி எம்.பி.,க்களுக்கு ஆக்கப்பணி என்றால் என்ன என்றே தெரியவில்லை. இந்த அறிவுக் கொழுந்துகளை தேர்ந்தெடுத்த, மக்களை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது. தி.மு.க.,வுடன் பல ஆண்டுகளாக நட்பாக இருப்பதால், அந்தக் கட்சி யுடனான கூட்டணியை தொடர்வதால், திராவிட நடைமுறை இந்த எம்.பி.,க் களை கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் தான் கால் எது... தலை எது என்று புரியாமல், 'எய்ம்சை காணோம்' என்று, பேட்டியும் கொடுத்து அசிங்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த, மக்கள் பிரதிநிதிகள் இப்படியா இருப்பது... இவர்களால் தமிழ் சமுதாயத்திற்கே அவமானம். 'சேருமிடம் அறிந்து சேர்' என்று, கிராமத்தில் பழமொழி ஒன்று சொல்வதுண்டு.திராவிட செம்மல்களுடன் சேர்ந்ததால் தான், இவர்களும் புத்திகெட்ட தனமாக செயல்பட்டுள்ளனர் என்பதில், சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...