Tuesday, September 6, 2022

விஷமப் பிரசாரம் இனி எடுபடாது!

  'போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துாற்றுவார் துாற்றட்டும், தொடர்ந்து செல்வேன்; ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்'இவை,- கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள். பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல், கண்ணதாசனின் இந்த கவிதை வரிகளுக்கு நிகராக, விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை விரயமாக்காமல், நாட்டை முன்னேற்ற என்ன செய்யவேண்டுமோ, அதை செய்து கொண்டிருக்கிறார்; தொடர்ந்தும் செய்வார். தற்போது பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்ற எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது உண்மை தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், அப்படி விலையை உயர்த்தியதால் தான், எதிர்க்கட்சிகளின் ஆட்சியில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருந்த கடனில் பெரும் பகுதியை, மத்திய பா.ஜ., அரசு திரும்ப செலுத்தி இருக்கிறது. எரிபொருட்களின் விலையேற்றத்தால், பொருளாதாரம் சரிந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியினர் புருடா விடுகின்றனர். ஆனால், பெட்ரோல் 'பங்க்'குகளில், டீசல், பெட்ரோல் விற்பனை, 1 சதவீதமாவது குறைந்திருக்கிறதா என்றால், இல்லையே...பத்து ஆண்டுகளுக்கு முன், அதாவது, 2010ல் கடன் வாங்கி, கடன் வாங்கி நாட்டை நிர்வகித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில், பொருளாதாரத்தில் இந்தியா, உலக அளவில், 11வது இடத்தில் இருந்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐந்தாவது இடத்தில் இருந்தது.ஆனால் இப்போது, ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, 11வது இடத்தில் இருந்த இந்தியா, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தாண்டு ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில், பொருளாதாரம் சீரழிந்திருப்பதாகவும், வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டதாகவும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, வெறும் பொய்யையும், புரட்டையும் மட்டுமே, எதிர்க்கட்சிகளும், அவற்றின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ஊடகங்களும் பரப்பி வந்தன.இப்போது, அவர்கள் வாய் திறக்க முடியாத நிலைமை உருவாகி விட்டது. இனி, அவர்களின் விஷமப் பிரசாரமும், பொய் பிரசாரமும் மக்களிடம் எடுபடாது என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...