Sunday, September 25, 2022

உங்களை கருவாச்சி என்று கூப்பிட்ட வாயெல்லாம் வெறும் 7 நாட்களில் சிகப்பி என்று கூப்பிடும். செக்கச்செவேலென சிகப்பழகை தரும் சிவப்பு பருப்பு.

 கொஞ்சம் கருப்பாக இருப்பவர்களை பார்க்கும்போது அவர்களை கருவாச்சி கருவாச்சி என்று சிலர் கூப்பிடுவார்கள். கருப்பா இருக்கிறவர்களுடைய மனது எவ்வளவு கஷ்டப்படும். கருப்பு என்பதும் ஒரு அழகுதான். அதற்காக கருப்பாக இருப்பவர்களை பார்த்து யாரும் கிண்டல் பண்ணாதீங்க. உங்களை யாராவது இப்படி கூப்பிடுவாங்களா. உங்களுடைய கலரையும் வெள்ளையாக மாற்றுவதற்கு சுலபமான செலவு இல்லாத ஒரு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். செலவில்லாத குறிப்பு என்றால் பியூட்டி பார்லருக்கு சென்று செலவு செய்யும் அளவு, அவ்வளவு காசு எல்லாம் ஆகாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதை செய்து கொள்ளலாம். இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் மைசூர் பருப்பு, ரோஸ் வாட்டர், ஆலோவேரா ஜெல். முதலில் 2 கைப்பிடி அளவு மைசூர் பருப்பை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. 1 கப் அளவு மைசூர் பருப்பு என்றால், அதை 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். 3 மணி நேரம் ஊறும் போது நாம் ஊற்றி இருக்கும் தண்ணீர் அனைத்தையும் அந்த மைசூர் பருப்பு ஈர்த்துக் கொண்டு இருக்கும்.  ஊறிய இந்த மைசூர் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் ஊற்றி விழுதாக அரைக்க வேண்டும். சூப்பரான மைசூர் பருப்பு கிரீம் நமக்கு கிடைத்திருக்கும். இதை அப்படியே ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து வடிகட்டி எடுத்தால் மைசூர் பருப்பின் சாறு சூப்பரான கலர்ல உங்களுக்கு கிடைத்திருக்கும். (லைட் பிங்க் கலர்) அந்த சாரில் தேவையான அளவு ஆலோவேரா ஜெல்லை போட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். சூப்பரான கிரீமும் கிடைத்துவிட்டது. இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாது. இந்த குறிப்புக்கு பயன்படுத்தக்கூடிய ஆலோவேரா ஜெல் வாசனை திரவியம் சேர்க்காத இருக்க வேண்டும். கலர் சேர்க்காததாக இருக்க வேண்டும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை கழுவி கொள்ளுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, இந்த கிரீமை தொட்டு முகம் முழுவதும் சின்ன சின்ன புள்ளிகளாக வைத்து வட்ட வடிவில் அப்படியே மசாஜ் செய்து விடுங்கள். இதையும் படிக்கலாமே: ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கிறவங்க இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. இப்படிப்பட்ட தவறுகளை எல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் முடி சீக்கிரம் உதிர்ந்து விடும். கண்ணுக்கே தெரியாமல் கிரீமை முகம் இரண்டே நிமிடத்தில் உறிஞ்சிக் கொள்ளும். அவ்வளவு தான். இரவு தூங்கச் செல்ல வேண்டியதுதான். காலையில் எழுந்து எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதே போல உங்களுடைய கைப்பகுதியிலும் இந்த க்ரீம் அப்ளை செய்யலாம். கைகளும் 7 நாட்களில் நன்றாக நிறம் மாறியிருப்பதை உணர முடியும். (7 நாட்களோடு விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து குறிப்பை பின்பற்றி வாருங்கள்.) பக்க விளைவுகள் இருக்காது. தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமான ஒரு வெள்ளை அழகைப் பெற இது ஒரு சுலபமான குறிப்பு. உங்களுக்கு இந்த ரெமிடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்களை இனி யாரும் கருவாச்சின்னு கூப்பிட மாட்டாங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...