மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்புவழங்காததால் தி.மு.க., தலைமைக்குஎதிராக தென்காசி கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்,வாசுதேவநல்லூர் சட்டமன்றதொகுதிகளை உள்ளடக்கியதென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் செல்லத்துரை. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்.
தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன்,ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ்குமார் எம்.பி.,யை மாவட்ட செயலாளர்ஆக்க முயற்சித்தார். இதற்குதென்காசி மாவட்ட கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். சென்னையில்தி.மு.க., கட்சி அலுவலகத்தில்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்குமார்தென்காசி மாவட்ட செயலாளர்ஆக போட்டியிட மனுவே செய்யாத நிலையில் அவருக்கு பொறுப்புதருவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
இரு தரப்பினரும் சென்னையில் காத்திருக்கின்றனர். இதனிடையே தென்காசி முதன்மை கோர்ட்டில்தி.மு.க,வை சேர்ந்த விஜயஅமுதாஎன்பவர் சார்பில் ஒரு சிவில் வழக்குதொடரப்பட்டது. தென்காசி வடக்குமாவட்ட செயலாளர் தேர்தலைசென்னையில் நடத்துவதற்கு பதிலாதென்காசியில் வைத்து நடத்தவேண்டும் என்ற வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்எடுத்துக் கொள்ளப்பட்டு அக்டோபர்28ல் விசாரணைக்கு வருகிறது.
தற்போதைய மாவட்ட செயலாளர் மாவட்டதேர்தலைசென்னையில் நடத்துவதற்கு பதிலாகதென்காசியில் வைத்து நடத்தவேண்டும் என்ற வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்எடுத்துக் கொள்ளப்பட்டு அக்டோபர்28ல் விசாரணைக்கு வருகிறது.

தற்போதைய மாவட்டசெயலாளர்செல்லத்துரையிடம் கேட்டபோது,நிறைய பேர் போனில் கேட்கிறார்கள்நான் வழக்கு தொடரவில்லை.
நான் சென்னையில் உள்ளேன்.இதைக் கேள்விப்பட்டதும் என்உயிரே அத்து போச்சு. எனக்குஎதிராக செயல்படுபவர்கள்இதனை செய்துள்ளனர். நாளைவழக்கை வாபஸ் பெறுவார்கள்.இல்லையென்றால் தீக்குளிப்பேன்.கட்சி தலைமை என் மீது நல்லஎண்ணம் கொண்டுள்ளது. அதனைகெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment