Sunday, September 25, 2022

உன்னை குறை கூறி அதை கேட்டுக்கொண்டிருப்பதை காட்டிலும் என் உயிர் போவதே சிறந்தது. என்ற பக்தன்…... விளக்கும் எளிய கதை.

 பண்டரிபுரத்தில் ஒரு பிராமணர். அவர் ஒரு தீவிர விட்டல பக்தர். குடும்பம் பெரியது என்பதால் அவருக்கு பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது.

🌺ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு கையில் ஏதோ கொஞ்சம் குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது.
🌺வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான் மேலும் நிறைய தான் தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப்பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார்.
🌺அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம்.
காவலாளி " யார் நீங்கள்?" என்றான்.
"நான் பண்டரிபுரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு" என்றார்.
🌺உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான்.
ராஜா அவரை உபசரித்தான்... " நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்கு தானே பூஜை செய்து விட்டு புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள்" என்று அவரை அழைத்து சென்றார்.
🌺இருவரும் செல்லும் வழியில் ஒரு பெரிய நந்தவனம் தென்பட்டது.
"இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்குகந்த புஷ்பங்கள் தரும் செடி கொடிமரம் எல்லாம் வளர்க்கிறேன்" இது போன்ற நந்தவனம் செழிப்பாக இருப்பது அபூர்வமானது அல்லவா?
🌺"ஆமாம் ராஜா"..
இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்... தக தக பள பள வென்று (முழுதும் வெள்ளியாலேயே சுவர்கள் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக அம்பிகை கோவில் காணப்பட்டது).
உள்ளே நிறைய பிராமணர்கள் வேதகோஷம், பூஜைக்கு எல்லாம் ரெடியாக இருந்தது,
🌺அம்பாள் விக்ரஹம் உயரமாக இருந்தது.
நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு அம்பாள் ஜகஜோதியாக தரிசனம் தந்தாள்.
ராஜா பூஜைக்கு அமர்ந்தார்...
விஸ்தாரமாக பூஜை நடந்து நைய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத விநியோகமும் ஆனது.
🌺ராஜாவும் பிராமணரும் சாப்பிட்டு முடிந்தபிறகு ராஜா பிராமணரை கேட்டார்.
அய்யா....இது போல உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? உங்கள் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா?"
🌺"எதோ பாவம் சில ஏழை பிராமணர்கள் சேர்ந்து பூஜை பண்ணி அங்கே விட்டல நாம சங்கீர்த்தனங்கள் செய்து வருவதால் இந்த அளவுக்கு செல்வ செழிப்பாக அங்கே பூஜைகள் எப்படி நடக்க முடியும் இல்லையா?"
🌺பிராமணருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது... என்ன? என்ன ராஜா அவர்களே ...விட்டலனும் பண்டரிபுர ஆலயமும் உங்களுக்கு அவ்வளவு மட்டமாக போய்விட்டதா? பக்தரல்லவா? ராஜாவுக்கு பதில் சொன்னார்.
🌺"ராஜா, நீங்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசனம் பண்ணினது உண்டா?
"இன்னும் இல்லை"
"அதனால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டினது போல் வெறும் வெள்ளியால் அல்ல.
இது நீங்கள் கட்டிய ஆலயம்... அது தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.
🌺 முப்பத்தி முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி நிற்கும் புனித ஸ்தலம்.
சந்திரபாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும்.
🌺பிராமணர் இவ்வாறு பொரிந்து தள்ளினதை கேட்ட ராஜாவுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் வந்தது.
இந்த பிராமணனுக்கு கடுந்தண்டனை கொடுக்க முடிவெடுத்தான்.
"நீ சொல்வது உண்மையா"
"நான் சொன்னது கொஞ்சம் தான்"...
🌺ராஜா உடனே மந்திரியை அழைத்தான் பண்டரிபுரம் செல்ல ஏற்பாடுகள் செய்ய சொன்னான்.
ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமணன் அழைத்து செல்லப் பட்டான் .
🌺"நான் விட்டலன் மீது உள்ள பக்தியால் விட்டலன் ஆலயத்தை குறைத்து சொன்னதை தாங்கமுடியாமல் ஏதேதோ உளறிவிட்டேனே. விட்டலா!!
நான் சொன்னது போல் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை ராஜா வெட்ட போகிறான். வெட்டட்டும்!, பரவாயில்லை
🌺விட்டலா!!...உன்னை குறை கூறி அதை கேட்டுக்கொண்டிருப்பதை காட்டிலும் என் உயிர் போவதே சிறந்தது.
இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு" வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக்கொண்டே வந்தார் பிராமணர்.
🌺ராஜாவின் சேனை பண்டரிபுரம் வந்து சேர்ந்தது.
யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது.
ராஜா திகைத்தான்...
🌺"அடாடா!!, என்ன திவ்ய தரிசனம் இது? அந்த பிராமணன் சொன்னது போலவே இருக்கே...
தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே...
சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள்..
🌺ராஜா பார்த்து அதிசயித்தான்...
ராஜா யானைமீதிருந்து கீழே இறங்கினான்.
பிராமணரிடம் ஓடி வந்தான்...
🌺"சுவாமி நீங்கள் சொன்னது அத்தனையும் அப்பட்ட உண்மை... உங்களால் தானே எனக்கு விட்டலன் தரிசனம் இன்று கிடைத்தது"
"உள்ளே விட்டலன் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவில் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான்".
🌺"விட்டலா!! என்னே உன் கருணை!!
இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்க கூடாது என்று என்னமாக தரிசனம் கொடுத்தாய். "நான் பாக்யவான்" என்று நெஞ்சுக்குள்ளேயே ஆனந்தம் அடைந்தார் பிராமணர்.
🙏சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...