ஆயுள் முழுவதும் எனக்கு வயதான தோற்றமே தெரியக்கூடாது. நரைமுடி வரவே கூடாது என்று நினைப்பது முதலில் மிக மிக தவறான ஒரு விஷயம். அந்தந்த வயதிற்கு உண்டான தோற்றம் நமக்கு வந்தால் தானே அது அழகு. அழகில் 20 போலவே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கெடுதலை கொடுத்து விடும். அதாவது 60 வயதிலும் 20 வயது போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய செயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வர அது நமக்கு என்றைக்குமே நன்மையை தராது. தீமையை தான் கொடுக்கும். 20 வயது இருக்கும் போது, 40 வயது தோற்றத்தை தான் நாம் பெறக் கூடாது. இதை தான் சிந்திக்க வேண்டுமே தவிர எப்போதுமே 20 போல இருக்க வேண்டும் என்று நினைப்பது ரொம்ப ரொம்ப தவறு. சரி என்னதான் சொன்னாலும் இந்த வெள்ளை முடி பிரச்சனை நம்மை பாடாதபாடு படுத்துகிறதே. வெள்ளை முடி 20 வயதிலேயே 40 வயது தோற்றத்தை கொடுக்கின்றது. இதை என்னதான் செய்வது. இதற்கான ஒரு தீர்வைதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். 300ml அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அது மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த மூன்று கைப்பிடி கருவாப்பிலையை ஈரம் இல்லாமல் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு 3 ஸ்பூன் வெந்தயம் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை வெந்தயத்தை போட்டு மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்து காயத் தொடங்கும். கருவேப்பிலையின் பச்சை நிறம் அனைத்தும் எண்ணெயில் இறங்கியவுடன். அடுப்பை அணைத்து விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் எண்ணெயில் கருவாப்பிலை கருகி விடக் கூடாது. அதை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி கருவேப்பிலை எண்ணெயில் கருகிவிட்டால் எண்ணெய் கரும்ப பச்சை நிறத்தில் வராது. கருப்பு நிறத்தில் கிடைக்கும். அதனால் ஜாக்கிரதையாக காய்ச்சுங்கள். காய்ச்சிய இந்த எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து நன்றாக ஆற வைத்து பின்பு ஒரு துணியின் மூலம் வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான எண்ணெய் தயார். இந்த எண்ணெயை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டியது தான். நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் தினமும் இந்த எண்ணெயை எப்போதும் போல தலையில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயை தலையில் வைத்து நன்றாக ஆயில் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் அமாவாசை தினமான இன்று இரவு இப்படி திருஷ்டி கழித்தால், உங்கள் குடும்பத்தை பிடித்த கண் திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தும் படபடவென வெடித்து சிதறிவிடும். தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வர உங்களுடைய தலை முடி அடர்த்தியாக வளர்வதோடு மட்டுமல்லாமல் கருகருவென வளரும். நீண்ட நாட்களுக்கு நரைமுடியை வரவிடாமல் தடுக்கும் சக்தியும் இந்த எண்ணெய்க்கு உண்டு. உடல் சூட்டினால் உங்களுடைய தலைமுடி நிறைய உதிர்கிறது என்றாலும் அதை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இந்த எண்ணெய்க்கு உண்டு. இதில் வெந்தயத்தை சேர்த்திருக்கின்றோம். அது உடல் சூட்டை தணிக்கும். தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இந்த சிம்பிள் ரெமிடியே போதுமானது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment