Sunday, October 16, 2022

அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள் !!!

 எதை கற்றுக்

கொள்கிறீர்களோ இல்லையோ..... அனுபவிக்க கற்றுக்
கொள்ளுங்கள் !!!
இது என்ன அனுபவித்துக்
கொண்டு தானே இருக்கிறேன் !
இதில்
புதிதாய் அனுபவிக்க கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது ??.....
இருக்கபோய்தானே இப்பதிவு .....
எதையும் அனுபவிக்க
மாட்டேன் என்று நாம் முரண்டு
பிடித்தாலும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக்
கொண்டு தானே இருக்கிறோம்.......
ஆனால், அதையெல்லாம்
ஓர் ஓரமாக வைத்துவிட்டு
இப்போது
நீங்கள்
என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று கவனியுங்கள் ....!!
அப்படி எதைச்செய்தாலும் அதில் உங்கள் முழுக்
கவனத்தையும்
செலுத்தி
அதன் வழியே ஏற்படும் தாக்கங்களை உள்வாங்கி
அதை முழுவதுமாக அனுபவியுங்கள் !!
உதாரணமாக....
காபி குடிக்கிறோம் என்று வைத்துக்
கொள்ளுங்களேன்
அந்த கப்பை கையில் வாங்கி...... அந்த சூட்டை கையில் வாங்கி .....
அதை உங்கள் கண்களை மூடி .......
மூக்கு அருகே கொண்டு வந்து...... அந்த வாசனையை நன்றாக ஆழ்ந்து...... உங்கள் நாசிகள் வழியே இழுத்து....... அந்த மனம் உங்களுள் நிறைந்து.....
அது தரும்
மாற்றத்தை அனுபவியுங்கள் ....
அப்படியே உதட்டருகே வைத்து லேசாக
அந்த சுவையின் தீண்டலை
அந்த இளம்சூட்டோடு
உங்கள் இதழ்வழியே வலிந்து....
அந்த நாக்கை அடைந்து....
அதில் உள்ள சுவை நாளங்களை.....
அது தூண்டச் செய்யும் அற்புதத்தை அனுபவித்து .........
அந்த சுவை எப்படி நாக்கில் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் பரவி .......
மூளைவரையில் அது உங்கள் சிந்தனையை.... எப்படி திசைதிருப்புகிறது..
அந்த சுவையின் பரவல்
உங்களுள்
ஓர் சக்தியை.... தெம்பை..... புத்துணர்ச்சியை.... தருகிறது !
என்று அனுபவித்து .....
ஒவ்வொரு சொட்டாக.....
உங்கள் உள்ளே சென்று கொண்டு இருப்பதை ......
அதைக்குடித்து முடிக்கும் வரையில் வேறு கவனம் சிதறாது அனுபவித்து பாருங்கள் .......
ஓர் காபி குடிப்பதில் இத்தனை இன்பமா ??
என்று உங்களுக்கே தோன்றும் ......
இதே காபியைத் தானே
இவ்வளவு நாளும் குடித்து அனுபவித்தோம்....
ஆனால்
அப்போது எல்லாம் தெரியாத
ஓர் சந்தோஷம் அனுபவம் இப்போது மட்டும் எப்படி.....??
இப்போது உங்களுக்கான நிகழ்வில்
உங்கள் முழுக்கவனமும், ஈடுபாடும்,
அதை கடந்த
வேறு எண்ணத்தில் பயணிக்காது
அதை முழுமையாக அனுபவித்ததின் பயனே
இந்த இன்பம் ......
இதுபோலவே வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும்....
உங்களை கருத்தில்கொண்டு, உங்களுக்கே என்று இறைவன் வடிவமைத்த தருணங்களைத் தான் எதிர்கொள்கிறோம் ஆனால் ,
அதை அனுபவிக்காது அனுபவிக்கிறோம்..
வாழ்வினிது..... வாழ்ந்து பாருங்கள் ......
அனுபவித்து வாழ்ந்து பாருங்கள் .......
இந்த தருணம் போலவே
வேறு தருணமே உங்கள் வாழ்வில் வரப் போவதே இல்லை !
என்ற நிதர்சனத்தை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் ......!!!
🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...