Monday, October 24, 2022

கோவை கார் வெடிப்பு: சில சந்தேகங்கள்; சில கேள்விகள்?

 கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து நேற்று முன் தினம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறுகையில், ''குறிப்பிட்ட அந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் இருக்கிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு எஸ்.ஐ., 2 கான்ஸ்டபிள் இருந்துள்ளனர். அவர்களை கடந்து கார் செல்ல முடியவில்லை. இறங்கி ஓடியிருக்கலாம். தப்பி ஓடும்போது சிலிண்டர் விபத்து நடந்திருக்கும்,'' என்று கூறினார்.

Coimbatore, Car Blast, Sylendra Babu,  கோவை, கார் வெடிப்பு, சைலேந்திர பாபு, DGP, police,


எனினும், கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் நிலவும் சந்தேக கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய அவசியம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
* 'காரில் வந்த ஜமேஷா முபீன், திடீரென இறங்கி தப்பி ஓடினார்' எனில், காருக்குள் இருந்த சிலிண்டர்களை வெடிக்க வைத்தது யார்?

* தப்பியோடியபோது வெடித்திருந்தால் சம்பவ இடத்திலேயே பலத்த தீக்காயங்களுடன் அந்நபர் பலியானது எப்படி?


latest tamil news



* ஜமேஷா முபீன் தப்பியோடும்போது, அவருடன் வந்திருந்த வேறு நபர்கள் காஸ் சிலிண்டர்களை தொலைவில் இருந்தவாறு வெடிக்கச் செய்துவிட்டு தப்பிவிட்டார்களா?

* நடந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும்போது 'தற்கொலை தாக்குதலாகவும்' இருக்க வாய்ப்புள்ளதாக சிலர் அஞ்சுகின்றனர். ஆனால் அவ்வாறில்லை என, போலீஸ் தரப்பில் உடனடியாக மறுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு போலீசார் உடனடியாக வர ஏதுவான வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைத்துள்ளனவா?

* கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர்கள் யார், எந்த அமைப்பினர்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...