Monday, October 24, 2022

சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை: சபரிமலை நடை திறப்பு.

 சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.


latest tamil news

மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலையில் செய்த சேவைகளுக்காக அவரது பிறந்த நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

இன்று நடக்கும் இப்பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் வழக்கமான பூஜைகளுடன் மன்னர் குடும்பத்துக்காக சிறப்பு பூஜைகள் நடக்கும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


latest tamil news



அதன் பின்னர் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்படும்.

கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ.,17 அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...