ஒருவருக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக இருக்கும். அதுவும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலைக்கு நிச்சயம் மற்ற பிரச்சனைகளை காட்டிலும், தீராத கடன் தொல்லை ஒரு மனிதனை எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். இதிலிருந்து எளிதாக விடுபடுவதற்கு செவ்வாய்க்கிழமையில் அம்மன் கோவிலில் அல்லது அம்மனுக்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன? கடன் கரைந்து, பண மழை பொழிய வைக்க கூடிய அற்புத பரிகாரம் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு முயற்சி மட்டும் போதாது. இறைவனுடைய அனுக்கிரகமும் தேவை. நம்மால் முயற்சி செய்து அதை செயல்படுத்த மட்டுமே முடியும், அதற்கான பலனை இறைவன் தான் நமக்கு கொடுக்கின்றார். எனவே இறைவனுடைய அனுக்கிரகத்தை பெற, அன்னையின் அனுக்கிரகத்தைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் இந்த விளக்கு ஏற்றி வந்தால் நீங்கள் நினைத்த காரியம் தடையில்லாமல் நிறைவேறும். மேலும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தீராத கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு இந்த 3 எண்ணெய்களில் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் தேவையற்ற பிரச்சினைகளும் ரொம்பவே சுலபமாக நீங்கி உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதை உணரலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அம்மன் கோவில் அல்லது காவல் தெய்வங்கள் வீற்றிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை அன்று குளித்து முடித்து சுத்தபத்தமாக செல்லுங்கள். செல்லும் போது 3 அகல் விளக்குகள், மூன்று விதமான எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். அம்மனுக்கு மிகவும் உகந்த மற்றும் கடன் பிரச்னை தீர்ந்து செல்வ வளம் பெறுவதற்கு, நினைத்த காரியம் கைகூடுவதற்கு உகந்த எண்ணெய் இலுப்பை எண்ணெய் ஆகும். மேலும் அன்னையின் அனுகிரகம் பெற நெய்யும், கஷ்டங்கள் கரைய வேப்ப எண்ணையும் கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இதை வீட்டில் செய்ய கூடாது! எப்பொழுதும் எண்ணெய்களை ஒன்றுடன் ஒன்று கலந்து தீபம் ஏற்றுவதற்கு கோவில் மிகவும் உகந்த இடமாகும். இந்த செயலை ஒருபோதும் வீட்டில் செய்யக்கூடாது. அதனால் வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் தடைபடும் என்கிற சாஸ்திரங்கள் உண்டு. அம்மன் கோவில் அல்லது காவல் தெய்வம் குலதெய்வம் போன்ற கோவில்களுக்கு சென்று செய்யலாம். 3 அகல் விளக்குகளில் தனித்தனியாக மூன்று எண்ணெய்களை ஊற்றுங்கள். நெய் ஒரு விளக்கிலும், வேப்பெண்ணை ஒரு விளக்கிலும், இலுப்பை எண்ணெயை ஒரு விளக்கிலும் ஊற்றி அதற்கு தனித்தனியாக இரட்டை திரி போட்டு எண்ணெயில் தோய்த்து முறுக்கி விட்டு பின்னர் தீபம் நின்று எரியுமாறு திரியை உயர்த்தி விட்டு தீபம் ஏற்றுங்கள். பின்னர் மனதார உங்களுடைய பிரார்த்தனைகளை வைத்து அம்பாளை வழிபடுங்கள். இது போலப் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் தொடர்ந்து செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டு வாருங்கள், எண்ணிய எண்ணமெல்லாம் எண்ணியபடியே ஈடேறும். மேலும் நினைத்த காரியம் கைகூடும். கடன் தீரும், செல்வம் சேரும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment