வலியை கடப்பது தான் நரக வேதனை ....
மனம் கடந்து போக சொல்லும் போது சிந்தனைகள் நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டீ மனதில்
கீறல்களை பதித்து விடுகிறது .....
பல சவால்களை எளிதாக கடக்க
தெரிந்த மனதிற்க்கு ....
அன்பின் வலியை கடப்பதற்க்கு
சக்தி அற்று நிற்கிறது மனம் .....
கேட்பாரற்று கிடக்கும்
மனதிற்கு தேவை என்பது
தலை சாய்து கொள்ள ஒரு உறவு
கை கோர்த்து கவலை போக்க
ஆறுதல் வார்த்தை .....
கண்ணீரை துடைக்க இருவிரல்
நான் இருக்கிறேன் ஆறுதல்
வார்த்தை.....
கட்டி அணைத்து கொடுக்கும் அரவணைப்பு ....
மடி மீது தலைசாய்து
துயில்கொள்ள வேண்டும்....
என்பது தான் அதிக பட்ச தேவை
இது இல்லாம் தவிப்போருக்கு தான் வலிகள் புரியும் .....
இந்த ஆறுதலை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு
அள்ளிக்கொடுங்கள்
சில வலிகளை எளிதாக கடக்க
உதவும் ....
No comments:
Post a Comment