Wednesday, August 28, 2019

நாங்க கூட திமுக தலைமை நிலையம் 'அறிவாலயம்' உள்ளே போய் விளக்கம் கேட்க நூறு பேர் போகலாம்!

1) "ஏன் ஐயா 69% இட ஒதுக்கீட்டுக்கு - அந்த QUOTA வுக்கு உள்ளேயே நாங்கள் வரவில்லை; அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்,
இது தனியாக 'இட ஒதுக்கீட்டில் பலனடையாத - ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு' 10% ஒதுக்கீடு...
இதை ஏன் ஐயா இவ்வளவு ஆவேசமாக எதிர்க்கிறீர்கள்?
2) உங்கள் தங்கச்சி 'திருப்பதி வெங்கடாசலபதிக்கு சக்தி இருந்தால் ஏன் உண்டியலுக்குப் போலீஸ் காவல்?'- னு கேட்குது!
உங்கள் சம்சாரம் கோயில் கோயிலா சுத்தி வராங்க! நீ இஸ்லாமியர் வீட்டு கல்யாணத்தில் போய், இந்துமத சாஸ்திர சடங்குகளை கேலி பேசறே!
ஆனால் அத்திவரதரை தரிசனம் பண்ண உங்க அப்பாவோட துணைவி, உன்னோட இணைவி எல்லாம் போறாங்க?
என்ன குடும்பம் இது? என்ன பகுத்தறிவு இது? உன் குடும்பத்துலயே 'பகுத்தறிவை' கொண்டுவர முடியாத நீ ஊருக்கு ஏன் உபதேசம் செய்கிறாய்?
3) திராவிட நாடு கோரிக்கையைப் புதைத்து விட்டு, 'மாநில சுயாட்சி' கேட்டீர்கள் - இப்போது மாநில சுயாட்சியை எங்கே புதைத்து வைத்திருக்கிறீர்கள்?
4) உங்கள் எல்லாருக்கும் அப்பாவாக இருந்த கலைஞரை 'வேற தொழில் பார்க்கப் போ'- னு சொன்ன வை.கோ எப்படி உங்கள் கூட்டாளி ஆனார்? அவரிடம் ஏதாவது மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினீர்களா?
5) 2006 தேர்தலின் போது ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்தீர்களே - 5 வருடம் 2011 வரை ஆண்ட நீங்கள் எத்தனை பேருக்கு ஆளுக்கு 2 ஏக்கர் கொடுத்தீர்கள்?
6) காஷ்மீர் விஷயத்தில் ஏன் இப்படி பல்டி அடித்தீர்கள்? முதலில் 370 பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு!
பிறகு 'நீக்கியதை எதிர்க்கவில்லை - நீக்கிய முறையைத்தான் எதிர்க்கிறோம்'... ஏன் இந்தத் தடுமாற்றம்?
7) உங்கள் உறவினர்கள், கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் ஏன் CBSE பாடத் திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?
அந்தப் பள்ளிகளில் இந்திப் பாடம் உள்ளதே ஏன்?
அப்படி இருக்க மற்றவர்களுக்கு மட்டும் இந்தி பயிலும் வாய்ப்பை மறுக்கிறீர்களே ஏன்?
8) அடிக்கடி சிகிச்சைக்காக லண்டன் செல்கிறீர்கள் - சிகிச்சைக்காக என்று செய்திகள் வருகின்றன.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறிய, நல்ல திறமையான மருத்துவர்கள் உள்ளபோது அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாமே? எதற்காக லண்டன் பயணம்?
9) 'சிகரம் தொட்ட ஊழல்'- என்று தா.பாண்டியன் அவர்கள் 2 G ஊழல் பற்றி சிறு புத்தகம் எழுதி அதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.
அதில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உங்கள் கட்சி அமைச்சர்கள் செய்த முறைகேடுகளை விலாவாரியாக விளக்கினார் தா.பாண்டியன்.
இன்று அதே கம்யூனிஸ்ட் கட்சி உங்களுடைய தேர்தல் கூட்டாளி!
தா.பாண்டியன் உங்கள் கட்சி மீது சுமத்திய குற்றச் சாட்டுகளை வாபஸ் வாங்கி விட்டாரா?
அப்படி உங்கள் மீது 'அபாண்டமாக'- 'பொய்க் குற்றச்சாட்டுகளை' அடுக்கி அதை ஒரு புத்தகமாகவும் போட்டு மக்களிடம் விற்றதற்காக கம்யூனிஸ்ட் கட்சி உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதா?
10) 'லடாக்' எந்த திசையில் எங்கே இருக்கிறது என்பதை இந்திய வரைபடத்தில் விரல் வைத்துக் காட்ட உங்கள் கட்சியினருக்குப் பயிற்சி அளித்து உள்ளீர்களா?....
இன்னும் நிறைய, நிறைய விளக்கங்களை உங்களிடம் பெற வேண்டி உள்ளது!
சொல்லுங்கள்... BJP, இந்து முன்னணி, ABVP, சைவப் பிள்ளைமார் சங்கம், பிராமணர் சங்கம், ஆன்மீகப் பேரவை, இந்து மக்கள் கட்சி...
இப்படிப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு உங்களிடம் கேட்டு விளக்கம் பெற இன்னமும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன!
எப்போது வரலாம் சொல்லுங்கள் 'அறிவாலயம்' கட்சி ஆபீசுக்கு?
ஒரே நிபந்தனை - சைக்கிள் செயின், சோடா பாட்டில் இவை மூலம் பதில் சொல்லாமல்...
பேச்சு பேச்சாதான் இருக்கணும்!
ஓ கே வா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...