Saturday, August 24, 2019

தி.மு.க., கொடி கட்டிய காரில்போதை புகையிலை கடத்தல்..

இலங்கையிலிருந்து தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவிய தகவலால், திருப்பூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அவ்வகையில், மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம் சோதனை சாவடியில், சென்ட்ரல் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.
நேற்று மாலை 4:00 மணியளவில், தி.மு.க., கட்சி ெகாடியுடன் வந்த காரை, (டிஎன்:39 சி எப்-2074) நிறுத்தி, சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பாக்கெட்டுகள் 52 கிலோ,35 க்கும் மேற்ப்பட்ட வெளிமாநில மதுபான பாட்டில்கள் பத்தாயிரம் பணம் இருந்தது.அதிர்ச்சியடைந்த போலீசார் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், குள்ளேகவுண்டம்பாளையத்தை ரேந்த முருகேசன் மகன் சதீஷ்குமார், 25 மற்றும் நாச்சம்மாள் காலனியை சேர்ந்த பீமாராவ் மகன் ஞானப்பிரகாஷ், 32 என்பதும் தெரிந்தது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சுற்று பகுதியில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.சதீஷ்குமார் தந்தை முருகேசன், தி.மு.க.,வை சேர்ந்தவர். இதனால், கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில், கொண்டு சென்றால், போலீசில் சிக்க மாட்டோம் என்ற எண்ணத்தில், இதில் நீண்ட காலமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பு;தமிழகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை,கடத்தல் ஆகிய எல்லாவற்றிலும் திமுகவினரே அதிகம் உள்ளனர்..ஆனால்,கனிமொழி பேசும் கூட்டங்களில் எல்லாம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது அதை தடுக்க ஒரே வழி..?திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்கிறார்..இது போன்ற செயல்களில் நமது கட்சிகாரர்கள் ஈடுபட கூடாது என்றோ,அப்படி ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் என்றோ ஏன் கூறுவது இல்லை..?தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கச் சொல்லி தன் கட்சிகாரர்களுக்கு இவர்களே கட்டளை இட்டு இருப்பார்களோ..?அல்லது அவர்கள் குணமே அதுதானோ.?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...