Friday, August 23, 2019

சரக்கு முறுக்கில்லை... செட்டியார் தான் முறுக்கு...........

வருஷம் சரியா ஞாபகம் இல்ல... ப.சிதம்பரம் காமர்ஸ் மினிஸ்டர் என நினைவு.
இந்த மொத்த விபரமும் ஜுனியர் விகடனில் வெளி வந்த செய்தி தான்..
மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தில் ப.சிதம்பரமும் ஒரு இயக்குனர்.
காமர்ஸ் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அதிக இந்திய அன்னியச் செலாவணி ஈட்டித் தந்த இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி விதித்து அந்தத் தொழிலை முடக்குகிறார் ப. சிதம்பரம்.
இந்த இரும்புத்தாது ஏற்றுமதியை செய்து வந்த நிறுவனம் செய்வதறியாது திகைக்கிறது
இனி இந்த நிறுவனத்தை நடத்த இயலாது என முடிவெடுக்கும்போது அதே நிறுவனத்தை ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் விலைக்கு வாங்க முன் வருகிறது.
பங்குச் சந்தை வல்லுனர்கள் வேதாந்தா குழுமத்திற்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என வியக்கிறார்கள்.
எதிர்காலமே இருண்டு போன நிறுவனத்தை ஏன் இத்தனை விலை கொடுத்து வாங்குகிறது இந்த வேதாந்தா குழுமம் என கவலைப்படுகிறார்கள்.
வாங்கி முடித்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்....
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்
இரும்புத்தாது ஏற்றுமதியால் இந்தியாவுக்கு கிடைத்து வந்த அன்னியச் செலாவணி இழப்பை சரிக்கட்ட மீண்டும் இரும்புத்தாது ஏற்றுமதிக்கான வரி முற்றிலுமா நீக்கப்படுகிறது..
ஆக அதன்பின் தெரிந்தது சரக்கு முறுக்கில்லை... செட்டியார் தான் முறுக்கு என..
இதைப் பற்றி கம்யூனிஸ்டுகள் கத்தி ஓய்ந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை
ப.சிதம்பரம் மீது...
அதே சிதம்பரம் தான் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி உள்ளார்.
தீதும் நன்றும் மகன் தர வாரா !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...