Thursday, August 29, 2019

திமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க சதி நடக்கிறது - உதயநிதி ஸ்டாலின்.

திமுக எப்போது இந்து மக்கள் உணர்வுகளை புண் படுத்தாமல், இந்துக்களை மதித்து நடந்தது?
இந்து என்றால் திருடன்...!!"
"ராமன் ஒரு குடிகாரன்...!!!"
“ சிதம்பரம் நடராஜரையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து தகர்கும் நாள் நல்ல நாள்.”
“ ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் ராமர் பாலம் கட்ட?”
இது எல்லாம் உங்கள் பாட்டன் மு. க. அவர்கள் பேசியது.
“மதுரை மீனாட்சிக்கு மாத விடாய் வருமா?”
“ மதுரை மீனாட்சிக்கு வருடாவருடம் கல்யாணம் ஏன்? சென்ற வருசம் கல்யாணம் செய்த கணவன் எங்கே போனார்.”
“தன் நகையை பாதுகாக்க துப்பு இல்லாத திருப்பதி சாமி”
இது எல்லாம் உங்கள் அத்தை கனிமொழி பேசியது.
“வைதீக திருமணம் எப்படி நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும். மண மக்களை இப்படி வசதியாக நாற்காலி போட்டு, அதிலே உட்கார வைத்து திருமணம் நடக்காது. மணமக்களை தரையில் உட்கார வைத்து, அவர்கள் பக்கத்தில் ஐயர் அல்லது புரேரகிதர் அங்கே உட்கார்ந்து கொண்டு, அந்த திருமணத்தை எப்படி நடத்தி வைப்பார் என்றால், அவருக்கும் மண மக்களுக்கும் இடையில் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் இருந்து வரும் புகை மூட்டம் அந்த மண மக்களின் கண்களை தாக்கி கண்ணீர் சிந்த விடுவார்கள். அவர்கள் மட்டுமா? உங்கள் கண்களையும் விட்டு வைக்காது. நீங்களும் உங்கள் கண்களை கசக்கிக் கொண்டு அங்கே ஒரு சோக சூழ்நிலையில் அனைவரும் இருப்பார்கள்.
அதன் பின் புரேரகிதர் சில மந்திரங்களை எடுத்து சொல்வார். கின்னர்களை கூப்பிடுவார், கிம்புருவர்களை கூப்பிடுவார், தேவர்களை, முப்பத்து முக்கோடி தேவர்களை கூப்பிடுவார். அதற்கு மேல் சில extra அவதாரங்களையும் கூப்பிடுவார்.
அவர் என்ன சொல்கிறார். மண மக்களுக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அந்த புரேரகிதரை கூப்பிட்டு கேட்டால் அவருக்கும் தெரியாது. அவரும் சொல்வார், எனக்கும் தெரியாது.
ஆனால் அதன் உள் அர்த்தத்தை பார்த்தால், உடம்பெல்லாம் நடு நடுங்கும். அவ்வளவு கேவலமான முறையில் அந்த மந்திரங்கள் இருக்கும்”
ஒரு முஸ்லிம் திருமண விழாவில், தி. மு. க. தலைவரும் உங்கள் தந்தையுமான திரு ஸ்டாலின் அவர்கள் பேசியது.
அவர் குறிப்பிடும் மந்திரத்தில் வரும் பதி என்ற சொல்லுக்கு தப்பர்தம் கூறும் விமர்சனம் செய்து இந்து மக்கள் மனதை புண் படுத்தி உள்ளார்.
ராஷ்டிர “பதி”(குடியரசு தலைவர்) என்பதற்கு குடியரசு “கணவன்” என்று பொருள் எழுதுவது போல், சிறு பிள்ளைத் தானமாக எழுதி உள்ளனர்.
பதி என்பதற்கு, தலைவன், பாது காவலன், ஆசான், கணவன் என்றும் இன்னு பல பொருள்கள் உண்டு. இடத்துக்கு தகுந்தபடி பொருள் கொள்ள வேண்டும்.
இந்து மக்களால் தெய்வமாக போற்றப்படும் அன்னை ஆண்டாளை வேசி என்று திமுக நட்புடைய வைரமுத்து பேசியதற்கு உங்கள் குடும்பத்தில் யாராவது கண்டனம் தெரிவித்தது உண்டா?
காலம்காலமாக இந்து மக்கள் கடை பிடித்து வரும் சித்திரை தமிழ் ஆண்டின் தொடக்கம் என்ற பண்டிகையை முடிவுசெய்து ஆணை போட்டது உங்கள் பாட்டன். jj ஆட்சியில் அந்த ஆணை ரத்து செய்யப் பட்டது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சித்திரை கொண்டாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கூறி வருவது உங்கள் தந்தை ஸ்டாலின் அவர்கள்.
முஸ்லிம் பண்டிகை, கிருத்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் நீங்கள் எந்த ஹிந்து பண்டிகைக்காவது வாழ்த்துக்கள் சொன்னது உண்டா?
முஸ்லிம் பண்டிகையில் கஞ்சி குடிக்க செல்லும் திமுக தலைமை, கிருத்துவ பாதிரியிடம் ஆசீர்வாதம் வாங்கும் திமுக தலைமை, இந்துக்கள் மத்தியில் ஆடி கூழ் குடிக்காதது ஏன்? ஸ்ரீரங்காத்தில் அய்யர் நெற்றியில் அணிந்த விபூதியை உடனே துடைத்தது ஏன்?
அப்புறம் ஏன் இப்போது இந்து மக்களை உரிமை கொண்டாடுகிறீர்கள்.
உங்கள் அம்மாவை (tmt. துர்கா ஸ்டாலின்) கோவில் கோவிலாக அனுப்பினால் பாவ மன்னிப்பு கிடைத்து விடாது? "ஊழில் பெருவலி யாவுள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும் - திருக்குறள்.
முக நூல் பக்கங்களில் உங்கள் முகத்திரை கிழிய ஆரம்பித்து விட்டது. 2021 தோல்வி பயம் உங்கள் மனத்தில் பற்றிக் கொண்டது. அதனால் அந்தர் பல்டி அடித்து இந்து சொந்தம் பாராட்ட முற்பட்டு உள்ளீர்கள்.
இந்து மக்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது. ஓட்டை பறித்து விட்டு வேதாளம் முருங்கை மரம் ஏறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தாலி அறுப்பு, பூணூல் அறுப்பு செய்யும் தி. க. தலைமை இன்னும் இவர்களுடன் தான்.
பெரியார் பாட்டு பாடும் இவ‌ர்க‌ள் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை பரப்புகிறவன் காட்டு மிராண்டி என்பது எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...