Thursday, April 30, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது.

'தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அரசு பஸ்கள் இயக்கப்படாது' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகள், இன்னும், பச்சை மண்டல பகுதிகளாக மாறவில்லை. இந்நிலையில், பச்சை மண்டல பகுதிகளில் மட்டும், நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலை ஏற்படும். பொதுப் போக்குவரத்துக்காக, அரசு பஸ்களை இயக்குவதில், தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்.நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு, வாடகை அடிப்படையில், 100 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசின் உத்தரவுகளை மதித்து, முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே, பஸ்களை இயக்க உள்ளோம். அரசு, எப்போது பொதுப் போக்குவரத்தை அனுமதித்தாலும், இயக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஊரடங்கு தளர்த்தவு,  அரசு பஸ்கள் இயக்கப்படாது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...