Tuesday, April 21, 2020

அன்னிக்கு மூடியது தான் ஓட்டல்...

கந்தசாமி ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்!
அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள்!
.
ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை!
.
ஒரு போர்டு எழுதி போட்டார்!
"இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது"
.
கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்!
சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்!
.
இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்!
சீனி கேட்டார்!
.
முதலாளி சொன்னார்! சீனி கிடையாது!
.
கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது!
.
இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்!
.
அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார்
"இனி மேல் தோசைக்கு சீனி கிடையாது"
.
கிச்சாமி மறுநாள் வந்தார்!
இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்!
ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது! மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார்!
சீனி கேட்டார்!
.
முதலாளி " முடியாது போர்டு ஐ பார்" !
.
கிச்சாமி நீ போர்டு ஐ பார் இனி" மேல் " தோசைக்கு தானே கிடையாது?
கீழே உள்ள தோசைக்கு கொடு ! என்றார்!
.
கந்தசாமி அன்னிக்கு மூடியது தான் ஓட்டல்.... இன்னும் தொறக்கல
😁😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...