Tuesday, April 28, 2020

ஹிந்து தர்மத்தை யாராவது பழித்து பேசினால் நடப்பது நல்லவையாக இருக்காது! காலம் தான் பதில் சொல்லும்!

ஜோதிகாவை இழிவு படுத்துவது என் நோக்கமல்ல, அதுவும்
அவர் ஒரு பெண்!
பெண்ணை போற்றி வணங்கும் சமுகத்தில் பிறந்தவன் நான்!
ஒரு பெண்ணை பொதுவெளியில் இழிவுபடுத்துவதை என் ஹிந்து தர்மம் ஒரு போதும் அனுமதிக்காது.
இது எனக்கு அரசியல் செய்யவில்லை! அதே சமயத்தில் அலட்சியமும்
செய்யமாட்டேன்!

ஆதலால்
திருமதி ஜோதிகா சூரியா அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நான் அமைதி காப்பதும் நியாயமான செயல் அல்ல!
சரி விசயத்திற்கு வருவோம்......
தஞ்சை பெரிய கோவில்
என்று தொடங்கி....
கோவில்கள் கட்டும் செலவில் மருத்துவமனை கட்டலாம் என்றார்கள். இது வரை தஞ்சை பெரிய கோயிலை போல எந்த பிரம்மாண்ட கோவிலையும் யாரும் கட்டியதில்லை! இனி யாரும் கட்டப்போவதும் இல்லை!


கோவில்கள் வெறும் இந்துக்களின் வழிபாட்டு தலம் மட்டும் கிடையாது.
அது தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சின்னம். தற்கால அறிவியலின் சிம்மசொப்பனம்!
முப்பாட்டன் ராஜராஜ சோழன் நமக்கு அருளிய வரலாற்று பொக்கிஷம்!
இதை யாரேனும் பழித்து பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன்!
இந்த ஊரடங்கு எனக்கு பொறுமையை கற்றுத்தந்துள்ளது.
ஆகையால் உங்களுக்கு இதை தெளிவுபடுத்தும் பணியை நான் ஏற்க்கிறேன்.
கோவில் உண்டியலில் போடும் பணம் அரசின் கஜானாவுக்கு தான் செல்கிறது.
கோவில் சொத்து முழுக்க
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பராமரிக்க முடியாமல் பல சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
மீதம் உள்ள சொத்தின் வருவாய் அரசுக்கு தான் செல்கிறது. இது தஞ்சை பெரிய மட்டும் அல்ல! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலட்ச கணக்கான கோவில்களும் அடக்கம்.
அரசுக்கு வருவாய் ஈட்டும் பெரிய துறை நமது இந்து சமய அறநிலையத் துறை தான். இங்கு வாழும் மக்களின் கல்வி, மருத்துவம் இன்னபிற அத்யாவசிய துறைகளே
இந்துக்களின் கோவில் வருமானத்தை நம்பி தான் உள்ளது. ஆனால் சர்சிலிருந்து அரசு நிதி செல்வதில்லை ஆனால் அவர்கள் ஜெருசலேம் செல்ல இங்கே மானியம் உண்டு. இஸ்லாமியர்களின் மசூதியில் இருந்து அரசுக்கு நிதி வருவதில்லை ஆனால் அவர்கள் மெக்கா மதினா செல்ல மானியம் உண்டு.
ஆனால் இந்துக்கள் சாமி கும்பிட கோவிலுக்கு சென்றால், வாகன பார்க்கிங் கட்டணம்,
அர்ச்சனை கட்டணம்,
தரிசன கட்டணம், பொங்கல் கட்டணம், அபிஷேகம் கட்டணம்,
நேர்த்திக்கடன் கட்டணம் என்று சொல்லிக் கொண்டே போகலாம் இந்த பணமெல்லாம் எங்கே போகுது என்றால் கோவிலுக்கா?.... கிடையவே... கிடையாது!
அரசின் கஜானாவுக்கு தான் செல்கிறது!
ஏழைகள் மற்றும் பக்தர்கள் பசியோடு
கோவிலுக்குள் வந்தால் அவர்கள் செல்லும் போது வயிறு நிறைந்து தான் செல்ல வேண்டும். என்பதர்க்காக தான் கோவில்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று பிரசாதம் காசுக்கு விற்க்கப்படுகிறது. அன்னதானம் பல்வேறு பக்தர்களின் தானத்தால் தான் நடைபெறுகிறது.
இப்படி இருக்க பொசுக்குனு கோவில்களை பற்றி தவறாக பேசலாமா?
மனிதனுக்கு எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாத சினிமா எடுக்க பல கோடி செலவு செய்வதற்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம்! பள்ளிக்கூடங்கள் துவங்கலாமே! என்று கேட்டால் உங்களை பாராட்டும் முதல் ஆள் நான் தான்.
அகரம் பவுண்டேஷன் மூலம்
பல நூறு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கிறார்கள் அது மிகப்பெரிய பணி பாராட்டுக்குரியது.
ஆனால் அந்த அகரம் பவுண்டேஷன் னுக்கு வரும் நன்கொடை எவ்வளவு தெரியுமா?
சரி!.... இப்போது கொராணா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு கொடை வள்ளல்கள் அரசுக்கு நிதி அளித்தார்கள்.
அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்.
இதில் பாரதம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள், மடாதிபதிகள், இந்து ஆன்மீக அமைப்புக்கள் எல்லாம் வழங்கிய நிதி எவ்வளவு தெரியுமா?
ஒரு ரூபாய் கூட அரசுக்கு நிதி வழங்காமல் ஹஜ் மானியம், ஹாஜிகள் உதவி தொகை, சந்தனக்கூடு திருவிழா, ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு பல ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி எதற்கு என்று கேட்க முடியுமா? அல்லது மசூதி வேண்டாம் என்று சொல்லும் திராணி உள்ளதா?
சேவை செய்ய போகிறோம் என்று பெரிய சர்ச் கட்டி மருத்துவம், பள்ளிக்கூடம் என்று வியாபாரம் செய்யும் இந்த வியாபாரிகளை பார்த்து சர்ச் தேவையா என்று கேட்கும் திராணி இருக்கிறதா? கோடிகளில் புரளும் கிறிஸ்தவ மிஷனரிகளை பார்த்து
ஏன் நிதி வழங்கவில்லை என்று கோள்வி கேட்க முடியுமா?
சீ!....நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு
இனியும் எங்கள் ஹிந்து தர்மத்தை யாராவது பழித்து பேசினால் நடப்பது நல்லவையாக இருக்காது! காலம் தான் பதில் சொல்லும்!
திருமதி ஜோதிகா அவர்கள்
தன் தவறை உணர்ந்து இந்த இழிவான போச்சுக்கு மக்கள் முன்பு மண்ணிப்பு கேட்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...