Thursday, April 30, 2020

தானாகவே குறைந்துபோன *காற்றின் மாசு.!*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*
காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!
நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*
கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தளங்கள்.!*
காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*
தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*
இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*
சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*
காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*
சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*
சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*
பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*
தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*
பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!
இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*
*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*
*தனிமை நாட்கள்-35*
✍️✍️✍️✍️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...