Thursday, April 23, 2020

** தன்னைக் காத்துக்கொள்ளும் மனிதனா நீங்கள் **

ஒரு கிலோ எள் இருந்தால் ஒரு மாதம் உணவின்றி வாழமுடியும் தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
ஒரு கிலோ நாட்டுப்பாசிபயிறு இருந்தால் எட்டு மணி நேரம் வேலையில் பணியாற்றும் திறன் கிடைக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
பத்து நாட்டுமுருங்கையின் விதைப்பருப்பும், ஐந்து கிராம் பசுநெய்யில் பொரித்த கருவக்கோந்தும் ஒரு டம்ளர் நாட்டுமாட்டின் பசும்பாலும் இருந்தால் தினம் இரவு தாம்பத்திய வாழ்வும் வெகு சிறப்பாய் நடத்திட துளியும் உடலில் சோர்வு இன்றி வாழ முடியும் தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
தினம் அரை மணி நேர ஆசணப்பயிற்சி செய்து வர போர்வீரனாக வலம்வரலாம் தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
சரியான தட்பவெப்பநிலையில் வாழும் நமக்கு காலை ஆறு மணிக்கு சூரிய உதயமெனில் சூரியனை பார்க்க எழும் பழக்கம் வந்து விட்டால் ஆற்றலுக்கே ஆற்றல் வழங்கும் சக்தியுன்டாகும் என்பது தெரியுமா உங்களுக்கு.
( சூரிய காயத்ரி இருபத்தெரு நிமிடம் சூரியக்கரில் இருந்து எடுத்துக் கொள்ளும் ஆற்றம் பெருவது)
மேலும்.
நெற்றியில் சளிக்குற்றமும் அடிவயிற்றில் மலக்குற்றமும் இன்றி வாழ காலையில் தேநீராக துளசி தூதுவளை கரிசாலை கீழாநெல்லி அவுரி கலந்த டீ தூளே நல்லது என்பதும், இரவு கடுக்காய் பொடி ஒரு கிராம் போதுமே அடிவயிற்றில் சேர்ந்த கழிவுகள் அனைத்தும் நீங்கிட ஆரோக்கியம் தரும் தன்வந்திரி நாம் தான் என்பது தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
வாரத்தில் ஒரு நாள் புற்றுமண்ணில் குப்பைமேனி சாறும், சின்னவெங்கா சாறும், திருநீற்றுப்பச்சை சாறும் கலந்து உடல் முழுவம் தேய்த்து ஒரு மணி நேரம் காயந்த பின் குழித்துவர தோல் நோய் என்பதே ஆயுளுக்கும் வராது. Sun screen lotion தேவையில்லை என்பது தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
மனிதன் நோய்வாய்ப்படுவது வாத பித்த ஐய ஏற்றத்தால் மட்டுமில்லை. அறுசுவையின் ஏற்றத்தாழ்வும் காரணமே, இனிப்பும் புளிப்பும் மிகுதியாக. காரமும் உப்பும் மத்திமமாக, கசப்பும் துவர்ப்பும் மருந்துக்குக் கூட எடுப்பதில்லை. துவர்ப்பு சுவை தூய ரத்தத்தை உண்டாக்கும் தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி னு எதுக்கு சொன்னாங்க, கெமிக்கல் பேஸ்ட் மூலமாக காலையிலேயே உமிழ்நீரோடு உறவாடவா? நாயுருவி வேர் அல்லது நாயுருவி சாம்பல் சிறிது உப்பு போதுமே. அதுவும் இல்லையா மூங்கில் இலைச்சாம்பல் போதுமே. வேப்பங்குச்சி கூடவா கிடைக்கவில்லை.
ஆவாரை பூத்திருக்க சாவோரைக் கண்டதுன்டோ என்றால்? ஆவாரம் பூவை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
நாம் வசிக்கும் தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது பாலை
இதில் குறிஞ்சி நிலம் திரிந்த பாலை ஒருவகை.
இங்கு வாழும் மக்கள் வேட்டுவர். இவர்கள் தம் தலையில் காந்தள் பூவைக் கண்ணியாகப் பிணைத்துத் தலையில் சூடிக்கொள்வர். வில்லம்பு கொண்டு ஆமான்களை உணவுக்காக வேட்டையாடுவர். இவையெல்லாம் மாறிபோய்விட்டது. 4G உலகமாக தமிழ்க் கலாச்சாரம். கரிசாலை அவுரி குப்பைமேனி கொட்டக்கரந்தை பொன்னாங்கண்ணி வல்லாரை சிருசெறுப்படை இவ்வேழு மூலிகையும் சிறந்த காயகல்பம் என்பது தெரியுமா உங்களுக்கு.
மேலும்.
மருதநிலத்தில் கிடைக்கும் சாதா மூலிகைகளையே அறியாத நமக்கு,
ஜீவகந்தி
பொற்சீந்தி
நத்தைச்சூரி
ஜோதிப்புல்
முப்பிரண்டை
கல்சோம்பு
தொழுகண்ணி
மூவிலைக்குருத்து
அழுகண்ணி
வெள்ளை ஆவாரை
வெண்புரசு
சக்கரைவேம்பு
செந்தும்பை
கருவாழை
செந்திராய்
கல்தாமரை
கருநொச்சி
கருவீழி
போன்ற நூற்றியெட்டு உயரிய கல்பமூலிகைகளை தெரிந்து கொள்வது எங்கனம்.
சாதாரணமாக
சீந்தில்கிழங்கை நல்லெண்ணெயில் காய்ச்ச துணைக்கு சீரகம் மிளகு சேர்த்து வடித்து தலை முழுகிட, நேத்திரபூடு தைலம் கண்களில் தினம் ஒரு துளி விட்டு வர வயது நூறானாலும் கண்னொளி மங்குமோ.
நானும் தெரிந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றம் காண நாடும் சாமானியனே.
கற்றது கையளவு கல்லாதது கடலளவு.
கற்றது கடுகில் கால் பங்கு
கல்லாதது இவ்வுலகளவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...