Wednesday, April 22, 2020

உண்மையை பாராட்டுகிறேன்.

“இஸ்லாமியரை – மதத்தை.. இழிவு படுத்தினால் வேலை காலி என அரபு நாடுகளில் எச்சரிக்கை விடப்பட.. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பயந்து போய் இருக்கிறார்கள்..” என சிலர் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
@ இந்து அடிப்படைவாதிகள் மட்டுமல்ல.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தரம் தாழ்ந்து பதிவிடுகின்றனர்: இரண்டுமே கண்டிக்கப்பட வேண்டியவையே.
@ அரபு நாடுகளில் காலங்காலமாகவே இதர நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமியர் உட்பட பல மதத்தினர்) கொடுமைப் படுத்தப்படுவது நடந்தே வருகிறது..
இது குறித்து அங்கு வாழும் எவரும்.. அதாவது, எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியர்களும் பதிவிடுவதில்லை. வெட்டி மத வெறி பதிவுகள்தான் இடுகிறார்கள்.
@ மோடியை இந்தியர்கள் விமர்சிக்கலாம். ஆனால் இன்னொரு நாட்டினர் மிரட்ட அவர் பயந்துவிட்டார் என்பது போல மகிழ்ந்து பதிவிடுவது தவறு.
# எனது கருத்து சரியா, தவறா? உடனடியாக என்னையும் “சங்கி” என பின்னூட்டமிடாமல், இதற்கு முந்தைய சில பதிவுகளையாவது படித்துவிட்டு, பிறகு, “பட்டம்” கொடுங்கள்! 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...