தமிழகத்தில், சில தளர்வுகளுடன், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, அமலில் உள்ள முழு ஊரடங்கு, நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு முடிவடைகிறது. அதனால், வரும் 21ம் தேதி காலை, 6:00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன் விபரம்:
* அனைத்து மாவட்டங்களிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.எனினும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், இந்த 11 மாவட்டங்களில், கூடுதலாக சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும், கட்டுப்பாடுகளுடன் நாளை மறுதினம் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது
*தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள், 'இ- - பதிவு'டன் அனுமதிக்கப்படும்
* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர், சேவை கோருவோர் வீடுகளுக்கு சென்று, பழுது நீக்கம் செய்ய, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, இ- - பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும், இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதி இல்லை
*சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், காலை, 9:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை செயல்படும். விற்பனைக் கடைகள் செயல்படாது
*வாடகை வாகனங்கள், டாக்சி மற்றும் ஆட்டோக்களில், பயணியர் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை டாக்சிகளில், டிரைவர் தவிர, மூன்று பயணியர்; ஆட்டோக்களில் டிரைவர் தவிர, இரண்டு பயணியர் மட்டும் பயணிக்கலாம்
*வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்; மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்
*ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், 25 சதவீதம் பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
No comments:
Post a Comment