யார் ஒருவருக்கு சுக்கிர யோகம் அடிக்குதோ, அவர்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருள் சேர்க்கை நிச்சயமாக இருக்கும். செல்வ செழிப்போடு வாழ சுக்கிரனின் கடைக்கண் பார்வை நம் மேல் விழ வேண்டும். சுக்கிரனின் கடைக்கண் பார்வை நம் மீது விழ வேண்டும் என்றால் அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் நிச்சயம் நமக்கு கிடைக்க வேண்டும். இப்படியாக அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீசப் செம்பருத்தி பூவை வைத்து ஒரு சிறிய தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே செம்பருத்தி பூவுக்கு நல்ல விஷயங்களை வசியம் செய்யக்கூடிய தன்மை அதிகமாக உள்ளது. குறிப்பாக செம்பருத்தி பூவுக்கு உள்ளே இருக்கும் மகரந்தத்திற்க்கு அந்த சக்தி அதிகமுண்டு. செம்பருத்தி பூவுக்கு நடுவே காம்பு போல ஒன்று எட்டிப்பார்க்கும் அல்லவா. அந்த காம்பை லேசாக கையில் உரசி எடுத்தால், மகரந்தம் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த மகரந்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மகரந்த துகள்களை ஒரு சிறிய டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவாக இருந்தால் கூட பரவாயில்லை. செம்பருத்தி பூ மகரந்த துகள்களுடன், சிறிதளவு அரகஜா, சிறிதளவு ஏலக்காய் பொடி, போட்டு நன்றாக கலந்து இதை ஒரு மைபோல தயார் செய்து கொள்ளவேண்டும். அதாவது நெற்றியில் இட்டுக் கொள்வதற்கு வசதியாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை கலப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். நெய் ஊற்றி குழைத்து இதை மை போல தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, மனதார குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்தப் பிரார்த்தனையை மனதார செய்யுங்கள். அதன் பின்பு தினம்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வர உங்களுக்கு பண வசியம் ஏற்படும். இது கருப்பு நிறத்தில் தான் இருக்கும். நெற்றியில் வைத்தால் இது என்ன திலகம் என்று கேட்பார்கள் என்றால், இதை உச்சந்தலையில் வைத்துக்கொள்ளலாம் தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் இந்த மையை நெற்றியில் வைத்து விட்டு அதன் மேலே குங்குமமிட்டு கொண்டாலும் தவறு கிடையாது. இந்த திலகத்தை மட்டும் நெற்றியில் இட்டு வந்தால் உங்களை விட்டு துரதிஷ்டம் தூரம் சென்று விடும். அதிர்ஷ்டம் பக்கத்தில் வந்துவிடும். கடன் தொல்லை தீரும். பணக்கஷ்டம் தீரும். வீட்டில் மன நிம்மதி இருக்கும். உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை நல்லதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு நடக்கத் தொடங்கும். நீங்கள் வேண்டுமென்றால் 48 நாட்கள் இந்த திலகத்தை வைத்து தான் பாருங்களேன். வாழ்வில் வரக்கூடிய நல்ல மாற்றங்களை. நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment