Monday, October 10, 2022

நாங்கள் தான் திராவிட அரசியல்வாதிகள்.

 எங்கடா எங்க ஆறுகள்.?

என்று கேட்டோம்.
எங்கடா எங்க காடுகள்.?
என்று கேட்டோம்.
எங்கடா எங்க மரங்கள்.?
என்று கேட்டோம்.
எங்கடா எங்க மலைகள்.?
என்றுகேட்டோம்.
எங்கடா எங்க மண்ணு.?
என்று கேட்டோம்.
எங்கடா எங்க மொழி.?
என்று கேட்டோம்.
கடைசியா பதிலைச்சொன்னார்கள்.....
இதையெல்லாம் வித்து தான்
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்,
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்,
மஞ்சள் அரைக்க மிக்சி கொடுத்தோம்,
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்,
மானாட, மயிலாட காண டிவியும் கொடுத்தோம்,
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்,
தாலிக்கு தங்கமும்,
அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்.
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்.? என்றோம்...
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே.! என்றார்கள்.
யாரடா நீங்கள்.? என்றோம்.
நாங்கள் தான் திராவிட அரசியல்வாதிகள் என்றார்கள்.!
மாற்றம் வேண்டும் என்றால்,
நாம் தான் மாற வேண்டும்.!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...