Sunday, March 26, 2023

🔥🙏🏼#நன்னெறி கதைகள்...🙏🏼 🔥#மனம்.

 

👍🔥#ஒரு_ஊரில் ஒரு கோவில் இருந்தது. அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார். சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது. அதை பார்த்த அவர் சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் அதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். உடனே ஆலய ஊழியர்கள் அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள். ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம். இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.
#அடுத்த_நாள் சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா சிறிது நேரம் தானும் சும்மா இருந்து பார்க்கலாம் என்று கோவிலில் வந்து சும்மா இருக்கும் சாமியாருக்கு அருகில் அமர்ந்தார். மனம் அலைய ஆரம்பித்தது. கோவிலுக்கு சம்பந்தமில்லாத அனைத்து நினைவுகளும் வந்தது. மனம் அடங்க மறுத்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் என்று முயன்றார். சிறிது நேரத்திற்கு மேல் கண்களை முடி இருக்க முடியவில்லை தான் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் அதில் கவனத்தை செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு வரன் தேட வேண்டும். மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார். திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது. சுவாமிக்கு வைக்க நெய்வேத்யம் பள்ளிமடத்தில் தயாரித்து கொண்டு இருந்தார்கள். மனது அங்கு செய்கிறது. அதை நினைத்ததும் வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தார். அதிகாரி திணறி போனார். அவரின் சொல்லுக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவருக்குபுரிந்தது. உடனே மறுபடியும் பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் எழுதினார் சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு.
🔥🙏🏼#மனம்_தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது. எனவே தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை. மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை...🙏🏼
May be an image of sculpture
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...