Thursday, March 23, 2023

சில விஷயங்கள் லேட்டாகத்தான் புரிகிறது.

 இப்போதுதான் என்றில்லை எப்போதுமே இந்த ஊடகங்கள் திமுகவின் பிடியில் தான் சிக்கி கிடந்திருக்கிறது.

இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் இதுவும் இதோடு தொடர்புடைய செய்திகளும் தேர்தல் முடிவையே மாற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தின.
ஒரு சுத்தமான இந்துவாக வெளி வேஷம் இன்றி கும்பகோணம் மகாமகத்தில் கலந்து கொண்டபோது அது குறித்த செய்திகள் இப்போதும் நினைவில் உள்ளது.
அன்றைய முதல்வர் ஸ்நானம் செய்ய சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டதை கூட அதீத புனைவுகளோடு விதவிதமாக செய்திகள் வெளியிட்டன.
ஆனால் இப்போதான் புரிகிறது, அது திட்டமிட்டு பரப்பப்பட்டது என்று.எப்படி சொன்னால் மக்களிடம் கோபம் உண்டாகும் என்று அதற்கேற்றவாறு செய்திகள் பரப்பட்டன. அந்த அம்மையாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இன்று சமூக ஊடகங்கள் இவ்வளவு தூரம் எளிய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காவிடின் ஜனாதிபதியின் ஈஷா வருகை கூட இப்படித்தான் சித்தரிக்கபட்டிருக்குமோ என்னவோ...
May be an image of 2 people and people standing
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...