Thursday, March 30, 2023

என்ன பண்ணனும் உங்க கூட என்றேன் ....

 முத்து படத்தின் தில்லானா தில்லானா பாட்டின் ஒரு இசைக்கோர்வைக்கு நாங்க ஒரு மூனு சக நடிகைகள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஷாட்டுக்கு அழைப்பு வரவே ஒருவர் கேமரா பக்கம் நகர நான் சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன்
அருகே அமர்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களின் அம்மாக்கள் - எங்க கூட எல்லாம் நீங்க பண்ணுவிங்களா - மாட்டீங்க தானே என்று என்னை வம்புக்கிழுக்க - என்ன பண்ணனும் உங்க கூட என்றேன் ....
ஒன்னும் இல்ல ... இந்த வசனம் பேசி ஒரு ரீல் பண்ணனும் என்று கேட்டுக் கொள்ள நானும் அந்த சுந்தரத் தெலுங்கை (ஒரு மூனு வரி) பேசி ஒத்திகை பார்த்து அவர்களுக்குத் திருப்தியாக வந்த பின் நடன ரீல் பண்ண ஷாட் முடிந்து வந்த அவர்களோடு தொடர அவர்கள் பக்கம் நகர நான் தலைப் படும்போது - "யார் கூப்டாலும் இவங்க போயிடுவாங்க" என்று சற்று முன்பாக "எங்க கூட எல்லாம் பண்ணுவீங்களா என்று அப்பாவியாக கேட்ட அதே அம்மா கமெண்ட் அடிக்க -
மனிதன் மகத்தான சல்லிப் பயலே தான் - சந்தேகமில்லாமல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...