Sunday, March 26, 2023

சனி பகவான் யாருக்கெல்லாம் நன்மை தருவார்? துன்பம் தருவார் பட்டியலை விட்டு விடுங்கள் சனீஸ்வரனுக்கு பிடித்த நல்ல மனிதரை போல வாழுங்கள்.

 1. நமச்சிவய ராமஜெயம் எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தவறாமல் செய்பவர்களை சனி தண்டிப்பதில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
7. எள்ளன்னம் வைத்து எந்நாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
8. வலம்புரி சங்குள்ள இல்லம், ஸ்ரீசக்கரம் மற்றும் சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
9. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
10. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
11. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
12. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பார்த்தால் சனிக்கு மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
13. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
14. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இல்லங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
15. சுத்தம் இல்லாத துர்நாற்றம் வீசும் இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
16. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
17. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
18. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
19. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.
20. வாயை திறந்தாலே பொய் தான் வரும் என்கிறவர்களை வலை வீசி பிடித்துக்கொள்வார் சனி.
21. கிழிந்த ஆடைகளை கூச்சமின்றி அணிந்து கொள்பவர்களை தேடி வந்து பற்றிக்கொள்வார் சனி
22. தேவையற்றவைகளை வீட்டில் தேக்கி வைப்பவர்களை நேசித்து பீடிப்பார் சனி.
23. உழைப்பை மட்டுமே நம்புகிறவர்களை உற்சாகம் தந்து காத்திடுவார் சனி
24. முதியோர்களுக்கும் முடவர்களுக்கும் முன்னின்று உதவுபவர்களை முன்னேற்றாமல் விடமாட்டார் சனி
ஸ்ரீராமஜெயம்.
No photo description available.
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...