Sunday, March 26, 2023

வித்தியாசமான வரதட்சணை கேட்ட #IAS அதிகாரி.. அதிர்ந்த #மணமகள்..

பேராவூரணி அருகில் #ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே #ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு #மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்..
இதை மனதில் கொண்டு அவர்களுடைய #பெற்றோர்கள் #மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்..
கடைசியாக #சென்னை #நந்தனம்_கல்லூரியில் #கணித பேராசிரியரின் மகள் செல்வி.#Dr_கிருஷ்ணபாரதி #MBBS அவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் இன்று திருமணம் நடந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய #நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் #இரண்டு நாள்..தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் #இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதையே நிபந்தனையாகும் வரதட்சனை யாகவும் இவர் கேட்டதே...திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க தற்பொழுது இவர் கேட்ட வரதட்சணையை கொடுத்து மணமகள் இன்றுமுதல் #திருமதி_கிருஷ்ணபாரதி_சிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்கள்..
#இக்காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,அதுவும் டெல்டா பகுதியில் எம் குல #விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய்,#மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பவர் எனது நண்பர் என்பதில் #பெருமைப்படுகிறேன்.
குறிப்பு:
நேற்று நடந்தது திருமணம்.
நாளை ஒட்டங்காடு (பெரியதெற்கிக்காடு ) பள்ளி கல்வி சீர்விழாவிற்கு கலந்து கொள்ள புறப்பட்டார்..
அவர்களது அயராது சேவை தொடரட்டும்..
May be an image of 2 people and people standing
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...