Friday, March 24, 2023

பிராமணர்களையும் பிராமண ஜாதியையும் இழிவு படுத்தி பேசியவர்கள் மீது எந்த பிராமணணாவது வழக்கு போட்டானா.போட்டால் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா???

 ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது பாஜக அல்ல!

ராகுல் மீது வழக்குப் போட்டது நரேந்திர மோடியும் அல்ல!
நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கும் அல்ல!
நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமியும், ஐபிஎல் புகழ் லலித் மோடியும் சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக் கடனாகப் பெற்றுவிட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு கம்பி நீட்டி விட்டார்கள்..
ஒரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசும்போது - "மோடி என்றாலே ஃபிராடுதான்!"- என்று தான் மிகவும் அலங்காரமாகப் பேசுவதாக எண்ணிப் பேசிவிட்டார்.
மோடி, படேல், சோலங்கி இவை எல்லாம் குஜராத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்கள்.
ஒரு கிராமத்தில் ஆயிரம் மோடிகள் இருப்பார்கள், ஒரு பெரு நகரத்தில் லட்சம் படேல்கள் இருப்பார்கள்...
ராகுல் காந்தி இதை அறியாமல் - ஏதோ பிரதமர் நரேந்திர மோடியை வசை பாடுவதாக எண்ணிக் கொண்டு - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசப்போக...
"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்தில் இருந்த பரனேஷ் மோடி ராகுல் மீது வழக்குப் போட்டுவிட்டார்.
"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம்.
சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து இருக்கிறது.
அதே நீதிமன்றம் ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி அளித்து ஜாமீனும் தந்துள்ளது!
இது DUE PROCESS OF LAW!
இதில் பாஜக எங்கே வந்தது?
"கருத்துரிமை" பறிப்பு எங்கே வந்தது?
ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் ஃபிராடு"- என்று பேசுவது "கருத்துரிமை"யா?
தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் ஃபிராடு"- என்றால் சும்மா விடுவார்களா?
May be an image of 2 people and text that says 'தற்போது புதிய தலைமுறை உணயை RISSN "ராகுல் காந்தியை தண்டித்துள்ளது வருந்தத்தக்கது பேச்சுக்காக ராகுல் காந்தி போன்ற தலைவரை தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது; தான் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என விளக்கம் தந்த பிறகும் தண்டித்துள்ளது எதிர்பார்த்திராதது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜகவின் போக்கு ஜனநாயக உரிமைகளை நசுக்குவதில் வந்து முடிந்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் 23|03|2023 8 :00 PM ww.puthiyathalaimurai com'
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...