Wednesday, June 7, 2023

அங்கே தேடவேண்டி இருக்காது அல்லவா.

 குமாரபாளையத்தில் ஒரு பெட்ரோல் பங்கில்

நான் என் இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் அடித்துவிட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன்.
காற்றுஅடித்துக்கொண்டுருந்த பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் முகஞ்சுளித்தபடியே வேலைசெய்துகொண்டிருந்தார் எனக்குமுன்னால் நின்ற இளைஞரிடம்
வண்டியை "இப்படி நிறுத்து அப்படி நிறுத்து" என்று கூறியவர் ஒருகட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து
"ஏய்யா காத்து அடிக்கறதே ஓசில இதுலவேற ஏன்யா இப்படி போட்டு படுத்தற" என்றார்....
இளைஞனுக்கு அடுத்து நானிருக்கிறேன் சுளிரென்றது மண்டையில் உடனே நான்
"ஐயா எங்க வண்டிகளுக்கு நீங்க ஓசியில எல்லாம் அடிக்கல ஒவ்வொருலிட்டர் பெட்ரோலுக்கும் டிசலுக்கும் பெட்ரோலியநிறுவனம் ஐம்பதுபைசாவை
கழிவரையை சுத்தம் செய்யவும் வருகிற வாகனத்திற்கு காற்று அடிக்கவும் தருகிறது எங்கள் பணத்திலிருந்து...
இனி யாரிடமும் ஓசி என வார்த்தையை விடவேண்டாம் முதலில் புரிந்துகொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவனமேலாளரிடம் கேட்டுதெரிந்து,தெளிந்து வரும் வாகனஓட்டிகளிடம் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்" என்று கடி்து கூறியதுமட்டுமின்றி
பங் மேலாளரை அழைத்து புகார்கூறிவந்தேன்.....
நண்பர்களே.....
நாம் நம் வாகனத்திற்கு அடிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹2.50 ரூபாய் கமிஷனாகவும் மேலும் ஐம்பதுபைசா கழிவரையை பராமரிக்கவும் காற்றுஅடித்துக்கொள்ளவும் பங் நடத்தும் ஏஜென்ஸிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது....
இந்த வசதியை வாடிக்கையாளருக்கு செய்துதர மறுக்கு பங்க் மீது ஒரு வாடிக்கையாளர் மெயில்மூலம் புகார்தரும் பட்சத்தில் அந்த பங்க் தற்காலிகமாக பெட்ரோலியபொருட்கள் சப்ளையை எண்ணெய்நிறுவனம் நிறுத்திவிடும்...
பிறகு உங்கள் சமாதான பதில்மெயிலுக்குபிறகே பங்க் விற்பனையை தொடங்கும்
ஆகவே நண்பர்களே கார்பயணமோ இருசக்கர வாகனபயனமோ ஒரு வாடிக்கையாளருக்கு கழிவரையை மற்றும் காற்று அடிக்கவும் மறுக்கும் பங்க் மீது அங்கே பெயர்பலகையில் குறிப்பிட்டுருக்கும் மெயில் ஐடிக்கு புகாரளியுங்கள் .... உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...