Monday, June 27, 2016

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

1.அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
2.காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
3.சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
4.பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
5.கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.6.மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
7.குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
8.அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
9.புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
10.பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
11.பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
12.பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
13.சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
14.வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
15.முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
16.வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
17.முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.18.புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
19.புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
20.நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
21.தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
22.கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
23.முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
24.பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
25.புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
26.மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.27.மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
28.சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
29.வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
30.தூதுவலை- சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...