Friday, June 24, 2016

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று.

*கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகசரியாக மாட்டி விட நினைத்த காகிதபூ நாடக நடிகை ராசாத்தி ( இவரது இயற்பெயர் வேறு ராசாத்தி(எ) தர்மாம்பாள்.
கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர்.
அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம்.
நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்...) கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.
குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.
தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள்.
விடயம் அண்ணாவிற்கு போகிறது.
அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை அளித்தவர் உத்தமர் கருணாநிதி.


பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, " கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன் , அதை செய் " என்பதுவே.

உறுதியாக இருந்த அண்ணாவை , தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
அப்போது , சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி . பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.
வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று. கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தை விட பத்து மடங்கு குறைவு !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...