Wednesday, June 22, 2016

யார் இந்த ரகுராம் ராஜன்? ஏன் அவர் பதவியை நீட்டிக்காதது பெரிதாக பேச படுகின்றது ?


தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர்.
2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த போதும் அதை விட்டு விட்டு இந்திய பொருளாதரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான RBI governor பதவியை ஏற்றுக்கொண்டார்.அவர் செய்த முக்கியமான பணிகள்
1) அவர் பதவி ஏற்ற பொழுது நம் பொருட்களின் விலைவாசியை குறிக்கும் பணவீக்கம் 11 சதவிதத்துக்கு மேல் இருந்தது அதை பாதிக்கு மேல் குறைத்து உள்ளார்.
2) இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை 25 லட்சம் கோடி(3.6 பில்லியன் அமெரிக்கா டாலர் ) அளவுக்கு உயர்த்தி உள்ளார்.
3) இந்தியா வங்கி துறையில் வரா கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சாலான நடவடிக்கைகளில் இறங்கினார் (Banks asset review).
4) இந்திய பொருளாதாரம் மிக சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார் .
இது எல்லாவிற்றுக்கும் சிகரம் வைத்ததது போல 2016 அம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக Time நாளிதழால் தேர்வு செய்ய பட்டார்.
இவர் இப்போது பதவியை நீட்டிப்பு செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முக்கியமான காரணங்கள் .
1.துணிச்சலாக தனது முடிவுகளை எடுக்க கூடிய ராஜனின் செயல்கள் இந்தியாவில் உள்ள பல முறைகேடாக கடன் பெற்ற தொழிலதிபர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.அவர்கொடுத்த அழுத்தம் மூலமாக வங்கிகள் கொடுக்கப்பட்ட வாரா கடன்களை வசூல் செய்ய கிளம்பின.முன் போல் இல்லாமல் பெரும் கடன் வைத்துள்ள பணக்காரர்களிடமும் கடன் வசூல் செய்ய கிளம்பின.இதனால் தான் விஜய் மல்லயா,அணில் அம்பானி போன்ற முறையில்லாமல் கடன் வைத்துள்ள முதலாளிகளுக்கு நெருக்கடி உருவானது.விஜய் மல்லயா நாட்டை விட்டு ஓடினார்.அம்பானி போன்றோர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.இவர்கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.
2.அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காத ராஜனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை பயம் கொள்ள செய்தது. மோடியின் "Make in India" வில் உள்ள குறைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியது மற்றும் தொழில் அதிபர்கள் எளிதாக கடன் பெற வங்கி வட்டி விகிதத்தை குறைக்க சொல்லிய போது போது அவ்வாறு செய்வது விலை வாசியை உயர்த்தும் மற்றும் ஏழை ,நடுத்தர வர்க்கத்தை வர்கத்தை பாதிக்கும் என்று அவர் மறுத்தது அரசியல் வாதிகளை கோபம் செய்ய தொடங்கியது .
3.இவரால் பாதிக்கப்பட்ட பெரும் பண முதலைகள் சுப்ரமணியன் ஸ்வாமி மூலமாக காய் நகர்த்த தொடங்கினர்.ஸ்வாமி ராஜன் ஒரு தேச துரோகி என்று வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக மனம் வெறுத்த ராஜன் ,தான் செப்டம்பர் மாதத்திக்கு பிறகும் தான் விரும்பும் பேராசிரியர் பணிக்கு திரும்ப செல்வதாக அறிவித்து உள்ளார்.
ராஜன் போன்ற திறமைசாலிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவது இந்தியாவுக்கு பெரும் இழப்பு என்று அமர்த்தியா சென் போன்ற பல பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எது எப்படியோ இந்திய பண முதலைகள் மற்றும் சுப்பிரமணிய ஸ்வாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இதுதான் நம் தேசத்தின் அவல நிலை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...