Sunday, June 19, 2016

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல
மாதத்தில்
இடம்பெறக்கூடாது.
(மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை
அல்லது இரண்டு
பவுர்ணமி ஒரே
மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி,
ஆனி, ஆவணி, தை,
பங்குனி தவிர இதர
மாதங்களில்
திருமணம்
செய்வதைத்
தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில
பட்ச காலத்திலேயே
திருமணம் செய்வது
நல்லது என்பது
மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன்,
வெள்ளிபோன்ற சுப
ஆதிபத்தியமுடைய
கிழமைகள் மிக
ஏற்றவை. இதர
கிழமைகள்
அவ்வளவு உகந்தவை
அல்ல.
... ரிஷபம், மிதுனம்,
கடகம், சிம்மம், கன்னி,
துலாம், தனுசு,
மீனம் ஆகிய சுப
லக்கினங்களில்
மட்டுமே திருமணம்
நடத்த வேண்டும்
என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை,
திரிதியை, பஞ்சமி,
ஸப்தமி, தசமி,
திரயோதசி ஆகிய
சுப திதிகள் தவிர
இதர திதிகளை
தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த
லக்கினத்துக்கு 7 ம்
இடம். முகூர்த்த
நாளன்று சுத்தமாக
இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம்,
மிருத்யூ பஞ்சகம்,
கசரயோகங்கள்
போன்ற
காலகட்டத்தில்
திருமணம்
நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின்
போது குரு,
சுக்கிரன் போன்ற
சுபகிரகங்கள்
திருமண
லக்கினத்துக்கும்
மணமக்களின் ஜனன
ராசிக்கும் எட்டாம்
வீட்டில் இடம்
பெற்றிருக்கக்கூ
டாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள்
மணமக்களின்
சந்திராஷ்டம
தினமாக இல்லாமல்
இருப்பது மிகமிக
முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன
நட்சத்திர நாளிலும்
3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2
வதாக வரும் நட்சத்திர
தினங்களிலும்
திருமணம்
நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம்
விதி
கடைசியாக
மணமக்களின் பிறந்த
தேதி அல்லது
கிழமைகளிலும்
கல்யாணம்
பண்ணக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...