Tuesday, June 21, 2016

“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!” – புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ???

“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!” – புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ???

“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!” – புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ???
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந் தார். அப்போது ஒரு சீடன், புத்தரிடம்
ஒருகேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதிலளி க்காமல் புன்முறுவல் செய்தார். அப்போது அவர் ஒரு ஏரியை எதிர்கொண்டபோது, அங்கி ருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய் வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினர்.


புத்தர் தன்னிடம் கேள்விகேட்ட சீடரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பத ற்கு நீர்கொண்டு வரச்சொன்னார். சீடரும்தங்களிடம் இரு ந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர் நிலையை நோக்கி நடந்தார்.
அந்நேரத்தில் மாட்டுவண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இற ங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத் துடன் ஏரியின்கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற் றதாகக் காட்சியளித்தது.
இக்கலங்கிய நீர் எப்படிக்குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டு போய்க் கொடு ப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணிநேரம் சென்றபிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச்சென்று வரப்பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற் சென் று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும் பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லியகுரலில் சொல் லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந் தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாக வே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்யவேண்டாம்.அ தை அப்படியே விட்டுவிடவேண்டும். சிறிது காலஅவகாச ம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற் சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதி யாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற் சியின்றி அது நடக்கும்.
ஆகவே நீ கேட்ட‍ கேள்விக்கு சரியான பதிலை நான் சொல்லித் தெரிவதைவிட, அனுபவத்தில் நீ உணரவே உன்னை அந்த ஏரியில் இருந்து தண்ணீர் சொன்னேன் என்றார்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...