Wednesday, September 28, 2016

நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை


நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை

நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை
ராத்திரி லேட்டா சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய
ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. துருக்கி பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 700 ஆண் கள் மற்றும் பெண்களிடம் ஓர் ஆய்வை மேற் கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் , இரவு 8 மணிக்குப்பிறகு உணவு உண்ணும் நபர்களு க்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா கவும், உணவு சாப்பிட்ட 2 மணிநேரத்துக்குள் தூங்கும் நபர் களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்தது.
இரவு உணவருந்தியதற்குப் பின் தூங்கும்போது நமது ரத்த அழுத்தமானது 10% அளவுக்குக் குறைய வேண்டும். ஆனால், 8 மணிக்குப்பிறகு சாப்பிட்டு விட்டு 2மணிநேரம் இடைவெளி இல்லாமல் உடன டியாகப் படுக்கைக்குச் செல்லும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறையாதது தெரிய வந்துள்ளது.
மேலும் இரவில்தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களு க்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வி ல் தெரியவந்திருக்கிறதாம். இரவில் தாமதமாகச் சாப் பிடுவது தொடர்ந்தால் அவர்கள் எளிதில் மாரடைப்பா ல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...