Monday, September 12, 2016

எறும்பு சொல்லும் பாடம்......

ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதைப் பார்த்தேன். அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன. அது சில நேரம் தூக்கி கொண்டும், சில நேரம் இழுத்துக் கொண்டும் சென்றது. ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது. அது தன் முன் காலால் தூக்கி வைத்துப் பார்த்தது. பின்பு பின் காலால் நீட்டி எக்கிப் பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.
இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது. பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்ச கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்துவிட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது. மீண்டும் அந்த இறகை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.
நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது. ஆனால், ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.!
அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது. அந்த எறும்பின் வீட்டின் நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது. அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. ஆனால் எறும்பால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கிப் போட்டு விட்டு சென்று விட்டது.
எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை. எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதைத் தூக்கிப் போட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்க தொடங்கிவிட்டது.
- நம்ம வாழ்கையும் இப்படித்தான்.
அந்த இறகு மாதிரிதான் நம்ம கஷ்டமும், கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நாம வேலையை பார்த்துட்டு போகணும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...