Thursday, September 8, 2016

மரம் வெட்ட முடியல...............

ஒரு காட்டிற்கு ரெண்டு மரவெட்டிகள் போனாங்க. மாலை மீண்டும் ரெண்டு பேரும் சேரும்போது ஒருவரிடம் அதிக விறகும், மேலும் அவர் அதிக களைபடையாமலும் இருந்தாரு. மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சரியம் நம்மை போல தானே அவனும் அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானதுனு ஆர்வம் தாங்காம அவனிடமே கேட்டுட்டான்.
இவ்வளவு விறகுகளுக்காக நீ என்ன செய்தாய்?
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் ன்னு சொன்னான் நண்பன். !
மறுநாள் அவனும் அதேபோல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான். இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்ட முடியல.
மறுநாள் நண்பன் மரம் வெட்டும்போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும்னு திட்டமிட்டு, மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின் தொடர்ந்து போனான். நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டிட்டு ஓய்வா அமர்ந்தான். அந்த ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை அவன் தீட்டிட்டிருந்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...