Friday, September 21, 2018

மூட்டு வலி , எலும்பு தேய்மானம் எதனால்?

இன்று நாற்பது வயதை எட்டிவிட்டாலே போதும் சர்க்கரை இருக்கிறது... எலும்பு தேய்ந்து விட்டது என்று ஒவ்வொரு நேரத்திற்கும் கலர் கலராய் மாத்திரைகள் சாபிடுவோர் அதிகம். எந்த ஒரு நோய்க்கும் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாக வேண்டும் .ஆனால் குணமாகிறதா? இல்லை தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இத்தனை ஆர்த்தோ மருத்துவமனைகள் இருந்ததா? அப்போது மக்கள் வாழவில்லையா? கேரளாவில் எத்தனை கார்பரேட் மருத்துவமனைகள் இருக்கிறது? சிந்தியுங்கள்.இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு விரலுக்கும் தனி தனி மருத்துவர்கள் வந்துவிடுவார்கள். இன்று நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஆங்கில மருந்து கார்பரேட் கம்பெனிகளுக்கு கப்பமாக செலுத்தும் சூழல் உருவாகி விட்டது. முப்பது வருடங்களுக்கு முன்பு எலும்பு தேய்மானம் இல்லாமல் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் ? கால்சியம் பற்றாக்குறை எதனால் உருவாகிறது? அந்த காலகட்டத்தில் பால் என்பது மாடு மூலம் கிடைத்தது. இப்போது சோயா மூலமும் யூரியா மூலமும் தயாரித்து மனித உடலில் உள்ள எலும்புகளை வலுவிழக்க செய்கிறார்கள்.
இப்போது எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் எல் 4 ல் பிரச்சனை எல் 5 ல் பிரச்சனை எனவே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்கிறார்கள். உங்களுக்கு எலும்பு தேய்ந்து விட்டது... ஜவ்வு கிழிந்து விட்டது என ஏதேதோ காரணங்களை சொல்லி நம் பணத்தை பிடுங்குவதில் தான் குறிகோளாக இருக்கிறார்கள்.
இதற்க்கு தீர்வு என்ன?
இருக்கிறது...
வாத வள்ளி கிழங்கு... இது இயற்கையின் அற்புத படைப்பு... யாரும் விளைவிக்க முடியாத இயற்கையாக விளைந்தால் மட்டுமே கிடைக்க கூடிய கிழங்கு இது.காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால் தாம்மத்தியம் நீண்ட நேரம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும். ***********************************************************************
***********************************************************************
எப்படி சாப்பிடுவது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். , தினமும் நூறு கிராம் அளவிற்கு கிழங்கை நன்கு கழுவி, சுத்தம் செய்து,தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து
சூப்பாக குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...