Friday, September 21, 2018

அந்தர் பல்டி .

கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு !
பிறர் மனதை புண்படுத்தி பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கறேன்.
ஏதோ‌ என்னை அறியாமல் பேசிட்டேன் .
லொடுக்கு பாண்டி
அந்தர் பல்டி .
இதோ லொடுக்கு பாண்டி
கொடுக்குத் தேளாக
தெரியாமல் கொட்டிய வார்த்தைகள் !
முக்குலத்தோர் மீது கைவைத்தால் பார்த்துக் கொண்டு
சும்மா இருக்க மாட்டேன் .
எடப்பாடி முதல்வரானதே
சின்னம்மா போட்ட பிச்சை .
பிக்னிக் போன மாதிரி பத்து நாள் ஜெயிலுக்கு போயிட்டு வா ! னு ‌என் பசங்க கிட்ட சொல்லி வச்சிருக்கேன்
நீங்க சரக்கு அடிச்சா தான் தைரியமா கொலை செய்வீங்க .
நாங்க எல்லாம் தூங்கி எழுந்திருச்சவுடனே
பல்லு தேய்க்கறதுக்குள்ளே
கொலை செய்வோம் .
என் வீட்டை வித்தாவது உன்
குடும்பத்தை நான் பாத்துக்கறேன்.
ஜெயிலுனா பெயிலு
பெயிலுனா ஜெயிலு .
ஒரு நாளைக்கு ஒரு லட்சம்
சரக்கிற்கும் பிரியாணிக்கும்
செலவு செய்றேன் .
காக்கிச்சட்டையை கழட்டி வச்சுட்டு வா !
முதல்வர் பழனிச்சாமியே நான் அடிப்பேனு பயந்துக்கறார் .
கூவத்தூர் இடத்தை காட்டியதே நான் தான் .
கூவாத்தூரைச்
சுற்றிலும் தண்ணி .
எவனும் தப்பிச்சு‌ போக முடியாது .
இதெல்லாம் திரு .லொடுக்குபாண்டி
தெரியாம கையை
சொடுக்கி மேடை கைதட்டலுக்காக உணர்ச்சிகரமா கொட்டியது !
இப்போ தெரியாமல் பேசிட்டாராம் .
அடிச்சார் பாரு
அந்தர் பல்டி .
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு மக்கள் சட்டசபை உறுப்பினர் மேடை கிடைத்தால்
கொலை செய்வோம் என்றும்
காவல் துறையை சட்டையை கழற்றி வைத்து விட்டு வா
என்றும் , சரக்கிற்கே தினமும் ஒரு லட்சத்திற்கு செலவு செய்கிறேன் என்றும் சாதியை வெறியைத் தூண்டி முதல்வருக்கு பிச்சை போட்டேன் என்றும்
பகிரங்கமாய் மேடையில்
தெனாவெட்டாய் திமிராக
பேசுகிறார் என்றால்
தமிழ் நாடு விளங்குமா ?
திராவிடக் கட்சியின் இலட்சணம் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் தமிழகத்தின் அறியாமை மக்களை எந்தளவு
அடிமைப்படுத்தி அவர்களின்
மூளைகளை மழுங்கடித்து
வைத்து நாடாண்டு வருகிறது
என்பதற்கு ஒரு திராவிடக் கட்சியின் எம்எல்ஏ வான
கருணாஸ் உதாரணமாக
இருக்கிறார் என்பதற்கு
இதை விட பச்சையாக
உதாரணம் வேண்டுமா ?
கூவாத்தூரில் பணத்திற்கு சோரம் போய் மாமா வேலை
பார்த்ததை பெருமையாக
சொல்லும் எம்எல் ஏ தான்
முக்குலத்தோர் தெய்வமான
தேவரின் பெருமையை நாறடித்து தேவர் இனத்திற்கே
இழுக்கை தேடித் தந்திருக்கிறார் .
தேசமும் தெய்வீகமும்
எனதிரு கண்கள் என்று சொன்ன
மாமனிதரான தேவரின் ஆன்மாவே இவரை மன்னிக்காது .
தமிழக மக்களே இனியாவது தகுதியான நபர்களுக்கு
சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் .
இல்லையெனில் இவர்களை
போல் திமிரெடுத்த மக்கள்
தமிழ்நாட்டை சாதிமதவெறியை தூண்டி
சுடுகாடாக்கி விடுவார்கள் .
வெட்கித் தலை குனிய வேண்டும்
இவரை எம்எல்ஏ வாக
தேர்ந்தெடுத்த மக்கள் .
சிரிப்பு நடிகர் ஜெ போட்ட பிச்சையில்
எம்எல் ஏ வான ஆணவத்திமிரில் பேசிய பேச்சில்
சிரிப்பாய் சிரிக்கிறார்
என்பதே உண்மை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...