Saturday, September 22, 2018

வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நா உடமாட்டேன்.


தலைவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் என்பதினை நீங்கள் அறியாமல் இல்லை என்கிற நம்பிக்கையில்.........
சத்தம் இல்லாத டிவி கேட்டேன்
சறுக்கல் இல்லாத சகோதரி கேட்டேன்
சண்டை போடாத உறவுகள் கேட்டேன்
சரக்கு போடாத தொண்டனை கேட்டேன்
காசே இல்லாத பிரியாணி கேட்டேன்
செலவே செய்யாமல் செல்போன் கேட்டேன்
பியூட்டி பார்லரில் கடனைக் கேட்டேன்
பஜ்ஜியை கடையில் மிரட்டிக் கேட்டேன்
சந்தியில் நிக்காத பிழைப்பை கேட்டேன்
சட்டென வாய்த்திடும் பதவிகள் கேட்டேன்
காதல் செய்யாத பிள்ளையை கேட்டேன்
காவி அணியாத மனைவியை கேட்டேன்
தன்நலம் இல்லா தந்தையை கேட்டேன்
தானே தீர்ந்திடும் பிரச்சனை கேட்டேன்
பாரத்பந்தை கொண்டாட கேட்டேன்
பாரத்ரத்னா கொண்டார கேட்டேன்
வைகோ இல்லாத வாழ்க்கையை கேட்டேன்
சைகோ இல்லாத புத்தியும் கேட்டேன்
வாயே திறக்காத துரையை கேட்டேன்
கமிசனை அமுக்கா ராசா கேட்டேன்
காலை பிடிக்கும் காங்கிரஸ் கேட்டேன்
கழுத்தை அறுக்கா கூட்டணி கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை.
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மெரினா மெரினா மெரினா கேட்டேன்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...