Monday, September 24, 2018

" காமாக்யா ஆலயம் "


💮 காமாக்யா ஆலயம் செல்வோம் 💮

வணக்கம் இன்று நாம் ஒருவித்தியாசமான இறை வழிபட்டை பார்க போகிறோம் .

இறை நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் தனப்பட்ட விருப்பம் சார்ந்து . அத்துடன் சுதந்திரமும் கூட இதில் அடுத்த வர்களுக்கு சமூகத்திற்கு இடையூறு இல்லாத வகையில் இருத்தல் வேண்டும் என்பதும் அவசியமாகிறது .
அந்த வகையில் இந்த காமாக்யா ஆலயமும் இங்கு நடை முறையில் இருக்கும் வழிபாடு முறையும் எப்படி பட்டதாக உள்ளது என்பதை உணர முடிய வில்லை . இந்த பதிவை பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
இது ஒரு பாலிரை அவமதிக்கும் வகையில் உள்ளதா ? அப்படி இருக்குமேயானால் அதைப்பற்றி சம்பந்த பட்ட பாலினர் ஏன் ஏதிற்ப்பு காட்ட வில்லை என்ற கேள்வியும் எழாமலில்லை .
ஒரு வேளை இது சரியானது தானா எனவும் எண்ண தோன்றுகிறது .
இறை வழிபாடு பலகைப்பட்டது .
Image may contain: sky, tree and outdoor
சில பலியிட்டு வழிபாடு சில நேர்த்திகடன் செய்து வழிபாடு இன்னும் சில மிகவிசித்திரமான பழக்கங்களை கொண்டுள்ளது .
தலையில் தேங்காய் உடைப்பது . மிளகாய்பொடிகரைத்து தலையில் ஊற்றி அபிஷேகம் செய்வது . குழந்தைகளை பூமியில் புதைத்தும் இன்னுமொரு இடத்தில் உயிருடன் இருப்பவர்களை பாடைகட்டி ஈமசடங்கு செய்வது போல செய்தும் வழிபடும் பழக்கள்களும் உள்ளது.
ஆனால் இங்கு நாம் காண இருப்பது இங்கு ஒரு பெண் தெய்வத்தை பற்றி
பொதுவாக நாம் நம் பெண்களை தாயாக மகளாக சகோதரியாக தெய்வமாகவே மதிக்கிறோம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை . இன்னும் சொலவதானால் தாய்க்குபின் தாரம் எனறு மணைவிக்கே தாயின் இடத்தை கொடுத்து வணங்கும் பண்பாளர்களாகவே நம்மக்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டிருக்கிறார்ள் என்பது கண்கூடு.
சரிப்பா நீ என்ன சொல்ல போறே நீளமா எழுதி பந்தா பண்ணிட்டு இருக்காதே என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. இதோ விசயத்திற்கு வருகிறேன்.
மாத விடாய் உண்டாகும் பெண்கடவுள்
காமாக்கியா ஆலயம்.
இந்த ஆலயம் சக்தி பீடங்களிலேயே முதன்மையானதாகவும் தலையாயதாகவும் விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை காமரூபிணி, காமேஸ்வரி, காமாக்யா என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
இந்த ஆலயம் உருவாணதற்கு காரணமாக புராண சம்பவமாக சொல்லபடுவதாவது.
நான்முகன்பிரம்மன் தான்படைப்பு தொழில் செய்வதால் அகம்பாவத்துடன் இருக்கிறான். அதை ஆழிக்க நினைத்த தேவி தன்கூந்தலில் இருந்து ஒருஅசுரனை சிருஷ்ட்டித்தாள் .
அவ்பெயர் கேசிகன். அந்த அசுரனால் நடு நடுங்கிபோன பிரம்பதேவன் தேவியை சரணடைந்தார். உடே தேவி தான்சிருஷ்ட்டித்த அசுரனை தானே அழித்து சாம்பலாக்குகிறாள். அந்த சாம்பலால் ஒருமையை உண்டாக்கி அதில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு பிரம்மனிடம் கூறுகிறாள்.
உடனே பிரம்ம தேவன் நீலாத்ரிமலையையும் அங்கே நிறைய துளசி செடிகளுடன் கூடிய நந்தவனத்தையும் அமைத்தான் நான்முகன் என்று ஒருபுராணம் கூறுகிறது.
இந்த ஆலயம் அஸ்ஸாம்மாநிலத்திலு ள்ள கௌஹாந்தி என்னும்மிக பெரிய நகரம் மாகும். இந்நகர் பிம்மபுத்திரா நதிகரையில்உள்ளது .
முறகாலத்தில் பாண்டு என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது ( பாண்டு மகாபாரத்தில் மிக பிரசித்தமான பெயர்)
பிரம்மபுத்திரா நதியில் செய்யும் படகு பயணம் அன்னையின் அருளை போன்றே மிக இனிமையானது . சுகம் தருவதுமாகும்.
இந்த சக்திபீடம் அஸாம் கௌஹாத்திக்கு சமீபத்தில் பிரம்மபுத்திரா நதிகரையில் நீலாத்ரி என்னும் பரவதத்தில் அமைந்துள்ளது .
இதன் உயரம் சுமார் 600 அடிகளாகும்
இதில் 500 அடி உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது .
ஆலயத்தை ஒட்டினார்போல் ஒரு குகை அமைந்துள்ளது . அந்த குகையில் த்ரிகோணாகாரமாகவும் நீர் நிறைந்ததாகவும் சிறிய குளம்போல 32 அங்குல அளவில் இந்த சக்திபீடம் விளங்குகிறது.
இந்த பீடத்தில் முக்தியை வேண்டுவோருக்கு அதை அருள்கிறாள் .
வருடத்திற்குஒருமுறை கொண்டாடபடும் பண்டிகைக்கு பிஹு என்று பெயர்.
அம்பிகையின் திருநாமம் காமாக்கியாதேவி . ஈசன் இங்கு உமாநந்தாவாக திருவருட்பாலிக்கிறார்.
இத்தலத்துதேவி அன்பின் உறைவிடம்
கருவறையிவ் யோனிவடிவமாக ஒரு பாறை உள்ளது அப்பாறையில் உள்ள தேவியின்யோனிக்கே வழிபாடு நடைபெருகிறது .
மாதம் மூன்று நாட்கள் தேவிவீட்டுவிலக்காக இருக்கும் நாடாக்களில் இப்பீடத்திற்கு பூஜைகள் நடப்பதில்லை . அப்போது அதை ஒரு சிகப்புநிற பட்டுத்துணியால் சாத்தி மூடி விடுகிறார்கள் .
அந்த துணியை பிரசாதமாக பெருவோர் வாழ்வில் பெறற்கரிய பேறு பெற்றவர்கள் என்பது ஐதீகம்.
தவநிலையில் ஈசன் இருந்தபோது மலர்கணை கொண்டு அவர்தவத்தை கலைத்தான் மன்மதன் அதனால் ஈசன் அவனை சுட்டெரித்தார். ரதியின் வேண்டுகோளுக்கினங்கி மன்மதனை உயிர்ப்பித்தாள் பராசக்தி அதற்கு நன்றி கடனாக மன்மதன் இத்தலத்தை நிர்மானித்ததாக வேறொரு புராணம் கூறுகிறது.
இங்கு தான்அன்னை சத்தியபாமா நரகாசுரனை வதம் செய்தாள் .
காமரூபமாய் மாதவர்காத்திட காமகியி பீடத்தில் அமர்ந்தவள் இத்தேவி .
பெருந்தவம் புரிவோர்க்கு அருள் புரியவும் பேதமின்றி பாவியர்கும் அருள் புரியவும் தேவி தரும் தரிசனத்திற்குஈடு இணையே இல்லை திருமணவரமருள்வதில் நிகரற்றவள்
இந்த அம்பிகையை முக்தி தரும் இச்சக்தியை பக்தியுடன்வழி படுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...